tag:blogger.com,1999:blog-56033132477040896752024-02-07T21:50:25.935+05:30Short StoriesYamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-32512608387653992072013-10-31T17:00:00.000+05:302020-07-30T17:02:24.262+05:30கலம்பகக் கண்னி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<b>கலம்பகக் கண்னி</b><br /><br /> இடம்: வீரபாண்டியபட்டினம், தினம்: வைகாசி மாதம் தேய் பிறை த்ரயோதசி.<br /><br /><span style="font-size: medium;"><b>பா</b></span>ண்டியர்கள் காலத்தில் மிகவும் புகழ் வாய்ந்த நகரமாக விளங்கிய<br />வீரபாண்டிய பட்டினம், கதை நிகழும் காலத்தில் ஒரு சிறிய கடற்கரை கிராமமாக<br />மட்டுமே எஞ்சி இருந்தது. அதன் பழம்பெருமையை உணர்த்தும் விதமாக<br />ஒப்பிலாமணீசுவரர் திருக்கோவிலும், ஒரு காலத்தில் பெளத்த விகரையாக<br />இருந்து இப்பொழுது சுருங்கி விட்ட பெளத்த மடமும் கிராமத்தின் முக்கிய<br />வீதிகளில் வீற்றிருக்கின்றன. இது போக கோயிலிலிருந்து கூப்பிடு<br />தூரத்தில்,ஒரு காற்றாழி மண்டபமும் உள்ளது.<br /><br />முத்துக்குமார சாமி பண்டிதர், வழக்கம் போல் மாணவர்களுக்கு காற்றாழி<br />மண்டபத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திருக்குறளும்,<br />காப்பியங்களும் ஓலைச் சுவடிகளாக பாழடைந்த மண்டபங்களிலும், பெரிய<br />மனிதர்கள் மற்றும் அந்தணர்களின் வீட்டுப் பரணிலும் தூங்கிக் கொண்டிருந்த<br />காலமது. காற்றாழி மண்டபத்திலும், பண்டிதர், ஆதித்தர் முதலான அந்தணர்<br />இல்லங்களிலும் கிடைத்த பழஞ்சுவடிகளைக் கொண்டு வகுப்புகள் நடை பெற்றுக்<br />கொண்டிருந்தன. பெரும்பாலும் கோயில் மீது இயற்றப் பட்ட சிற்றிலக்கிய<br />வகைகளும், அவற்றுக்கான உரைகளும், உரையில் எடுத்தாளப்பட்ட வேறு சில<br />பாடல்களை உள்ளடக்கிய தமிழ் இலக்கிய வகுப்பு பண்டிதரால் நடத்தப்பட்டது.<br />ஜோதிடம், வான சாஸ்திரம் முதலான பேரறிவியல் வகுப்புகளும், வானிலை,<br />பருவநிலை, நிமித்தம், காரணம் போன்ற அன்றாட வாழ்வியல் குறித்த<br />வகுப்புகளும் ஆதித்தரால் அதே மண்டபத்தில் நடத்தப்பட்டது. கணிதம், வணிக<br />நுட்பம் மற்றும்<br />கோட்பாடுகள், புவியியல் மற்றும் அயல் மொழி வகுப்புகள் அம்மையப்பச்<br />செட்டியாரால் நடத்தப்பட்டது. இவை போக, அயலூர் விற்பன்னர்களும் உள்ளூர்<br />பெரியவர்களும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதுண்டு. இதே போன்று ஒரு சிறு<br />பள்ளி பெளத்த மடத்திலும் நடைபெற்றது. காற்றாழிப் பள்ளி போலல்லாது அங்கு<br />அனைத்து இனத்தவரும் மாணவர்களாய் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பௌத்தப்<br />பள்ளியில் சிலம்பம், வாள் பயிற்சி முதலான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.<br />பெளத்த துறவிகளுக்கு மேலும் விரிவான வகுப்புகள் கமுக்கமாக நடை பெற்றுக்<br />கொண்டிருந்ததையும் குடியானவர்கள் அறிந்திருந்தார்கள். அவருள் சிலர்க்கு<br />அதைக் கற்கும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றிருந்தது. இன்று பண்டிதர்<br />நடத்தும் வகுப்பு நம் கதையுடன்<br />தொடர்புடயதாதளால் நாம் காற்றாழி மண்டபத்திற்கு செல்வோம்.<br /><br />"... ஓப்பிலாமணீச்வரர் கலம்பகத்துள் புகுமுன், கலம்பகக் கூறுகளைப்<br />பற்றி..." பண்டிதர் இன்னும் கதைக் குறிப்புகளை வெளியிடத் துவங்கவில்லை.<br />அதற்குள் இந்த காற்றாழி மண்டபத்தையும் வகுப்பையும் ஒரு சுற்று பார்த்து<br />வருவோம். சேர நாட்டு மீன்விழிப் பலகணிகள் போல் கல்லினால் ஆன சுவர்களைக்<br />கொண்ட மண்டபம். மண்டபத்தின் கடைக்கோடி மூலையில் இருந்த கருவூலம் கதவுகள்<br />இன்றி திறந்தே கிடக்கின்றது. அதனுள் சில கற்சிலைகளும், மரப் பொம்மைகளும்<br />பரப்பி வைக்கப் பட்டிருந்தன. அங்கிருந்து திருக்கோவிலுக்கு செல்லும்<br />சுருங்கை வழி இரும்புக்கதவால் அடைக்கப் பட்டிருந்தது. இதே போல்,<br />சுருங்கையின் மறுமுனையும் கோவில் வளாகத்தினுள் அடைக்கப்பட்டே கிடந்தது.<br />வகுப்புகள் நடக்கும் நுழை வாயிலின் இடது புறப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு<br />துப்புரவாக காட்சி அளிக்கிறது. சுமார் 20 மாணாக்கர்கள் அமர்ந்து பாடம்<br />கேட்கலாம். பதினைந்தே மாணவர்கள் தான் வந்திருந்தனர். நாம் பண்டிதரிடம்<br />செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.<br /><br />"'வானுறு மதியை அடைந்ததுன் வதனம்<br />மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி<br />கானுறு புலியை அடைந்ததுன் வீரம்<br />கற்பகம் அடைந்ததுன் கரங்கள்<br />தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்<br />செந்தழல் அடைந்ததுன் தேகம்<br />நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்<br />நந்தியே நந்தயா பரனே!'<br /><br />இந்த ஈற்றுப் பாடலின் போது தீப்பற்றிய பந்தலுடன் நந்தி மன்னனும்<br />சாம்பலானான். இந்நிகழ்வுக்குப் பின் கலம்பகம் பாடி காலனை ஏவலாம் என்ற<br />எண்ணம் உறுதி பட்டது. இது போன்றதொரு கலம்பகம் ஒப்பிலா மணீஸ்வரர் மீதும்<br />இயற்றப்பட்டுள்ளது. இறைவனின் வரலாறு, திறம், குணம், அடியார்க்கு<br />அருளியமை பற்றி கூறி செல்லும் எண்பது கண்ணிகளைக் கொண்ட இந்த கலம்பகம்,<br />திருக்கோவிலின் சிதைவையும், கோவில் கொண்ட நகரத்தின் அந்திமக் காலத்தையும்<br />தொட்டுச் சென்று இறைவனின் மறைவுடன் முற்றுப் பெறுகிறது. இறைவனின்<br />கீர்த்திக்கு என்றும் அழிவில்லாததால், லிங்க உருவத்திற்கே மறைவு ஏற்படும்<br />என்று காலம் காலமாக மக்கள் நம்பி வருகிறார்கள். கலம்பக காலத்தினின்று பல<br />ஆண்டுகளுக்குப் பின்னும் நகரமும் மாந்தரும் எவ்விதக் குறையும் இன்றி<br />வளர்ந்து கொண்டே வந்தனர். கோவில் சுருங்கிக் கொண்டே வந்தது. எந்நேரமும்<br />இடிந்து விழுந்துவிடக் கூடும் என்ற பயம் மக்கள் மனதில் நிரந்தரமாக<br />குடிகொண்டு விட்டது. கோவிலின் நிலை கண்ட பாண்டிய மன்னன், பழைய கோவிலின்<br />அருகிலேயே புதியதாய் பிரம்மாண்டமான ஒரு கோவிலை எழுப்பினான். கலம்பகம்<br />பெற்ற ஒப்பிலாமநீஸ்வரரின் லிங்க உருவத்தைத் தவிர அனைத்து சிற்பங்களும்<br />புதிய கோவிலுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. இறைவனின் புதிய லிங்க<br />உருவமும் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப் பட்ட சில நாட்களிலேயே<br />பாண்டியன் மரணம் எய்த, பின் சில வருடங்களில் பாண்டிய வம்சமும் உரு<br />தெரியாது அழிந்து போயிற்று. அதன் பின் இந்த நகரமும் அதன் பழைய பொலிவை<br />இழந்தது. மக்களும் கலம்பகமே இவை அனைத்திற்கும் காரணம் என்று நம்பத்<br />தொடங்கினர். பழைய கோவிலின் பெரும்பாலான பகுதிகள் விழுந்து விட, எஞ்சிய<br />இந்த காற்றாழி மண்டபத்திலேயே மூல லிங்கமும் வைக்கப் பட்டது." மாணவர்கள்<br />பயத்துடன், பண்டிதர் சுட்டிக் காட்டிய திசையில் இருந்த 'ஆதிமூலமகா<br />லிங்க'த்தைக் கண்டார்கள்.<br /><br />வகுப்புகள் முடிந்த உச்சி வேளையில், "கலம்பகம் சொல்வது போல் நடக்கும்<br />என்றால், ஏன் இதுவரை லிங்கத்திற்கு எதுவும் நேர வில்லை? சந்நிதி<br />விழுந்தபோது லிங்கம் எந்த சேதாரமும் இன்றி தப்பித்தது எதனால்?" உருத்திர<br />பசுபதி கேட்டான். "லிங்கம் ஊனப்படும் நாளும் நேரமும் துல்லியமாக<br />கணிக்கப்பட்டிருப்பதை வியந்து ஆதித்தர் கூறியதை ஒரு முறை<br />கேட்டிருக்கிறேன். சோமா! உனக்கு இது பற்றி தெரிந்திருக்கும் இல்லையா?"<br />அவர்களுள் மூத்த மாணாக்கன் சதுர்வேதி கேட்டான். "இல்லை. தெரியாது" என்று<br />கூறி முடித்துக் கொண்ட <span class="il">சோமன்</span> வகுப்புத் தோழர்களை நீங்கி தனிப் பாதையில்<br />ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அன்றைய வகுப்பும், அதன் பின் வரும்<br />வழியில் நண்பர்கள் பேசிக்கொண்ட உரையாடல்களும் மனதில் நின்றாலும்,<br />அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, யோசிக்க, செய்ய வேண்டிய காரியங்கள் அவனுக்கு<br />நிறைய இருந்தன. காலையில் அவன் வேட்டியில் இருந்த குறி, அவனை ஆற்றங்கரை<br />நோக்கி ஓடச் செய்தது.<br /><br />"இதோட ஏழு தடவ மாத்தியாச்சு. இதான் கடைசி பார்த்துக்க..." தூரத்தில்<br /><span class="il">சோமன்</span> பாறைகளுக்குப் பின்னல் மறைவதை பார்த்து விட்டு, அவனை நோக்கி<br />சென்றவளை தொடர்ந்து வந்தன வார்த்தைகள். செடிகளுக்குள் நுழைந்து போக்கு<br />காட்டிவிட்டு <span class="il">சோமன்</span> இருந்த பாறைக்கு சென்றாள். "கல்யாணம் என்னைக்கு?",<br />"இந்தக் கிழமைக்குள்ள.. மாமென், நேத்து ரவைக்கே சொக்காரவுகளோட தண்டு<br />இறங்கியாச்சு. அம்மைக்கும் உறவுல கொடுக்குரதுல சம்மதந்தான்." "சரி..<br />இதுக்கு மேல ஒத்தி வைக்க வேணாம்... ரோகினி! இன்றை ராத்திரி காற்றாழி<br />மண்டபத்துக்கு வந்துடு. வெள்ளி எழுமுன்னே கிளம்பிருவோம்". "சரி. நாழி<br />ஓடுது. அம்மைக்கு சொல்லி மாளாது. வர்றம்." என்று ஓடியவள், நின்று<br />"வந்துருவீகள்ள?" என, "நிச்சயமாக.." என்றான் <span class="il">சோமன்</span>.<br /><br /></div>
<div>
<b><span style="font-size: medium;">கா</span></b>லையில் வந்தியன் வந்த பொழுது, இயல்பாய் இருந்த ஆதித்தரின் முகம்<br />இப்போது இறுகி இருந்தது. வந்தியன் இன்னும் அவர் அறையிலேயே இருந்தான்.<br />அவர் முன் பல சுவடிகள் விரிந்து கிடந்தன. "இம்முறை அறிவிக்கத்தான்<br />வேண்டும்." "இல்லை, வந்தியா! நாம் அவசரம் கொள்ளலாகாது. நம் காலத்தில்<br />மட்டுமின்றி, அதற்கும் முன்னேயும் கூட பல முறை அறிவித்து, தேடிக் கொண்ட<br />பழி போதும். நாம் சொன்னால், நம்பிய காலத்தை மக்கள் கடந்து விட்டார்கள்."<br />"ஆனால் சொல்ல வேண்டிய கடமையும், கட்டாயமும் இருக்கிறதே." "சேதத்தின்<br />விகிதம், எல்லை, தாக்கம் எதுவுமே அறியாது என்ன சொல்வாய் ? மீண்டும்<br />பார். ஆராய். உறுதி செய். பின் நிறுவுவோம் ". "ஆராய நம்மிடம்<br />நேரமில்லை." "அறிவிக்கவும் தான். இருட்டி நேரம் ஆகி விட்டது." என்றபடி<br />அறையை விட்டு வெளியேறினார். வந்தியன் மறுபடியும் சுவடிகள் மூழ்கினான்.<br />வீட்டில் அனைவரும் உறங்கிக் கிடந்தனர். "என்னப்பா சோமா! உறக்கம்<br />வரவில்லையா? எனக்கும் தான்." என்றபடி ஏதேதோ பேசினார். அதற்குள் வந்தியன்<br />அழைக்க மீண்டும் அவர்கள் விவாதம் தொடர்ந்தது. இவர்கள் விழித்திருப்பதால்,<br />இங்கும் அங்கும் நகர முடியாத படிக்கு கட்டப் பட்டிருந்த <span class="il">சோமன்</span> ஒரு<br />கட்டத்தில் உறங்கியும் விட்டான். விழித்துப் பார்த்த போதும், அவர்கள்<br />விவாதம் ஓய்ந்த பாடில்லை. இன்னும் சில நாழிகைகளில் வெள்ளி விழுந்து<br />விடும். அதற்கு மேலும் பொறுக்க மாட்டாது, <span class="il">சோமன்</span> உள்ளே நுழைந்தான்.<br /><br />"<span class="il">சோமன்</span> வந்து விட்டான். நாம் முதலில் அவனிடம் அறிவிப்போம்." <span class="il">சோமன்</span><br />தூக்கம் தோய்ந்த விழிகளை பிரித்து வைத்துக் கொண்டான். "சோமா! நம்மூர்<br />கலம்பகக் கதை தான். ஈற்றுப் பாடலுக்கு முந்தைய பாடலின் உரை நடை வடிவம்<br />என பண்டிதர் அளித்தது இது. இதன்படி இந்த வருடம் வைகாசி அமாவாசை அன்று<br />உண்மையாகும் ." <span class="il">சோமன்</span> வாங்கி வாசித்தான்.<br /><br />'சோமனின் ஆசைநாயகி, தாய் வழி சொந்தம் நீங்கி, சோமனைக் கூட வருங்கால்,<br />ஆதித்தன் சோமனை முகமோடு முகம் நோக்கிப் பிரித்த நள்ளிரவில், அவளிட்ட<br />சாபம், சோமனை தாக்காது, சோமசுந்தரனையன்றோ பீடித்தது'<br /><br />"இந்த இரவு தான் அது. விடிந்து விட்டது. நட, சென்றே பார்த்து விடுவோம்<br />". மூவரும் காற்றாழி மண்டபம் நோக்கி விரைந்தனர். ஆதிமூலமகாலிங்கம்<br />இரண்டாக பிளந்து கிடந்தது. ஆதித்தர் " சிவசிவா " என அலறினார். வந்தியன்<br />மக்களிடம் அறிவிக்க சென்றான்.<br /><br /><br /></div>
<div>
<span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif;"><b>ஆ</b></span><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif;">ற்றங்கரையில் " ஏட்டி நேத்து தான சொன்னேன். கல்லை உடிச்சுப் பிடாதன்னு.</span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif;">என்னத்தச் சொல்லிக் கொடுத்தாளுவளோ அந்த பிக்குணிமாறுங்க" என ரோகினியை</span><br style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif;" /><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif;">வைது கொண்டிருந்தாள் அவள் அம்மா .</span><div class="yj6qo" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif;">
</div>
</div>
<div>
<span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"><br /></span></div>
</div>
Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-28779262851165174362011-11-18T21:36:00.001+05:302011-11-18T22:17:34.721+05:30கரியன்- 2கண்ணாடித்துரை என்றும் கண்ணடித்துரை என்றும் நெல்லை சீமை மக்களால் அழைக்கப்படும் அந்த ஆங்கிலேயர் ஒரு வணிகர். அங்கு விளையும் பணப்பயிர்கள் யாவற்றையும் குறைந்த விலையில் வாங்கி, தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபம் பார்த்து வந்தார். அவருக்கு ஏன் அந்த பெயர் என்று கேட்டால் பலரும் பல காரணங்கள் சொல்வார்கள்.<br />"அந்த ஆள், போட்ருக்குற கண்ணாடிக்காகத் தான்."<br />"கண்ணடிக்கிற நேரத்தில வியாபாரத்த முடிச்சிருவாரு. அதான்."<br />"அவரோட உளவாளிகளோட சங்கேதமா இருக்கும்... தெரியல.. "<br />"யார்கிட்டயும் சொல்லாதிய.. அந்த ஆள் கண்ணுல ஏதோ கோளாறு. கண்ணாடி இல்லைனா சிமிட்டிகிட்டே இருக்க வேண்டியதுதான்.<br /><br />"இப்படி பலரும் பல கதைகள் சொல்வார்கள். சின்னக் கோனாரிடம் கேட்டிருந்தால் அவர் சொல்லி இருப்பார். "துரையோட நெசப் பேரு கன்னடியோ என்னவோ. அது வாயில நுழையாம தான் ஊரு இப்பிடி சொல்லிட்டு திரியுது." சின்னக் கோனார், கண்ணடித்துரைக்கு மிகவும் நெருங்கியவர். சிலர் அவரை அவரது காரியதரிசி என்பார்கள். ஆனால், சின்னக் கோனார் துரையிடம், மாத சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. வெறும் கமிஷன் மட்டும் தான்.<br /><br />"வெல்டன் சின்னக் கோனார்" என்று சொல்லி விட்டு, தொலைவில் நின்ற அந்த கரிய உருவத்தின் கண்களை நோக்கியவர், சுய நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் ஆயிற்று.<br /><br />இப்படி எத்தனையோ பேர்களை பார்த்திருக்கிறார். அவர்கள் சபிப்பார்கள். பரிதாபமாக முழிப்பார்கள். வெறுப்பை உமிழ்வார்கள். ஏமாற்றத்தின் வலி தெரியும். கோபம் தெறிக்கும். கண்ணீர் வடிப்பார்கள். வெறுமையில் நிறைவார்கள். சரி போகட்டும் என்று சென்றவர்களும் உண்டு. இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி பட்டவர்களும் உண்டு. ஆனால் அந்த பார்வை மேலே சொன்ன எதையும் தாங்கி நிற்கவில்லை. அது வேறு. அந்த பார்வை, அவருள் ஊடுருவி விட்டது. அவன் காட்டியது என்ன உணர்வு? அவன் பார்வை அவருக்கு எதையோ நினைவூட்டியது? எதை?<br /><br />வண்டி நெல்லையில் உள்ள அவரது கிடங்கில் கொண்டு, அப்படியே தலை கீழாகக் கொட்டப் பட்டது.<br /><br />"துரை.. சீக்கிரம் இதையெல்லாம் காலி பண்ணனும் தொரை. எலிங்க அதிகமா நடமாடுது."<br />"அது எவ்ளோ சாபிட்டுரும். விடு"<br />"இல்ல தொரை. நான் சொல்றது வேற.. சரி வேண்டாம் விடுங்க"<br /><br />மறுநாள், கிடங்கின் காவலாளி கிடங்கினுள் இறந்து கிடந்தான். உடலில் ஏதும் காயங்களில்லை. இறுகப்பற்றிய கைகள். பயத்தில் உறைந்த, திறந்திருந்த கண்கள். பேய் பிசாசு எதுனா கண்டு பயந்திருப்பாரு என்று பேசிக் கொண்டார்கள். அடுத்த நாள் புதியதாக வந்த காவலாளி, உள்ளே அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், இறந்தவர் ஆவியாக அலைவதாகவும் சொல்லி வேலையை விட்டு நின்று விட்டான்.<br /><br />அடுத்து வந்த நாட்களில், உள்ளே சென்று காவல் காக்க வேண்டாம் என்றும் வெளியில் நின்று கவனித்தால் போதும் என்றும் சொல்லி ஒருவர் காவலுக்கு அமர்த்தப் பட்டார். அவரும் உள்ளே இரைச்சல் அதிகாக உள்ளதென்று பீதியிலேயே காலத்தை கழித்து வந்தார். சின்னக் கோனார் கூறியதன் பேரில், ஒரு மலையாள மந்திரவாதி வரவழைக்கப்பட்டு கிடங்கை பேய்களிடம் இருந்து மீது மீட்டு துரையிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.<br /><br />"துரை. பேய் பிசாசெல்லாம் பெரிய விஷயமில்ல துரை. நம்ம பொருளுக்கு ஒன்னும் ஆகாது"<br />"பேய். நான்-சென்ஸ். எல்லாம் இவங்க பயம். என் கவலை எல்லாம், இதை சொல்லியே காவக்காரனுக்கு அதிக பணம் தர வேண்டி இருக்குதேன்னு தான்"<br /><br />சின்னக் கோனார், இது வரை பேய் பற்றி பயம் இல்லாதவரை கண்டதில்லை. துரை ஒரு மாவீரர் என்று எண்ணிக் கொண்டார். 'இதற்கும் அந்த கருப்பனின் பார்வைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது' என்று துரையின் உள் மனம் சொல்லிற்று. மந்திரவாதி உள்ளே சென்ற சில நொடிகளில் தலை தெறிக்க ஓடி வந்தார்.<br /><br />"கரியன்.. துரை... கரியன்.. ஒன்னு ரெண்டு இல்லை நெறைய.. " என்று பட படைத்தார்.<br />"வாட் இஸ் திஸ் கரியன்... நீதான் எதவேணா விரட்டுவேன்னு சொன்னியே.. இதையும் சேர்த்து விரட்டு"<br />"இல்ல துரை.. கரியன விரட்ட ஏலாது. மனசு வெச்சு போனா காணாம். யாராலையும் முடியாது தொரை" என்றார் மந்திரவாதி.<br />"சின்னக் கோனார்.. வாங்க நாம உள்ள போய் பார்த்து வருவோம்" என்று அவரை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார் துரை.<br />"கரியன பிடிக்க முடியாது துரை. கரியன் பொல்லாதவன். வேண்டாம் வந்திருங்க" என்று மந்திரவாதி வெளியில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.<br /><br />உள்ளே எலிகளின் நடமாட்டம் குறைந்திருந்தது. மூடைகள் ஒரு மூலையில் குவிக்கப் பட்டிருந்தன. காலடியில் ஏதோ சத்தம் கேட்கவே துரை குனிந்து பார்த்தார். தரையில் ஆறடி, தரைக்கு மேல் தூக்கிய தலை இரண்டடி, ஒரு லத்தி தடிமன். கரு கருவென ஒரு கரியன். தூரத்தில் அதே போல் பல கரியன்கள். எல்லா கரியன்களின் கண்களிலும் ஒரே தீட்சண்யம். துரைக்கு அந்த பார்வை புதிதல்ல. சில நாள் முன்பு பார்த்து மனதில் தங்கி விட்டஅதே பார்வை தான்.<br /><br />சின்னக் கோனார், சரிந்து விட்டார். வெளியில் வந்த துரையின் கண்ணாடி எங்கோ விழுந்து விட்டிருந்தது. அதன் பின் துரையின் கண்கள் சிமிட்டவில்லை. மந்திரவாதியோ சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டிருந்தார்.<br /><br />அன்று இரவே, கிடங்கு பொருட்களுடன் தீக்கிரை ஆக்கப்பட்டது. கரியன்களும் எரிந்து விட்டதாகவே துரை நம்பினார். மக்கள் நம்ப வில்லை.<br /><br />"கரியன கரியாக்க முடியுமா? பல வருஷமா கண்ணுல தட்டு படாத கரியன், கூட்டம் கூட்டமா தட்டு பட்டு துரை கண்ணு வியாதிய குணமாக்கி இருக்குன்னா சும்மாவா.. கரியன அழிக்க முடியாது.. கரியன் தெய்வம்லா?"Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-21095358778422191622011-11-16T01:20:00.000+05:302011-11-16T01:27:41.896+05:30கரியன் - 1கங்கைகொண்டானின் கரிசல் மண்ணில் கதிரவன் கால் பதிக்கும் சில நாழிகைக்கு முன்னதாக, காளைகள் பூட்டிய வண்டியொன்று, பருத்தி பொதிகளுடன் ஊரை விட்டு வெளியேறி திருநெல்வேலி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயில்கள் எல்லாம் நின்று செல்லும் நிலையங்களில் கங்கைகொண்டானும் ஒன்று. திருநெல்வேலியையும் மதுரையையும் இணைக்கும் பிரதான சாலையிலோ அல்லது திருநெல்வேலியையும் தூத்துக்குடியையும் இணைக்கும் பிரதான சாலையிலோ கங்கைகொண்டான் அமையவில்லை. பின் ஏன் ரயில் தடம் மட்டும் அவ்வழியே உள்ள, நாரைக்கிணறு, கங்கை கொண்டான், மணியாச்சி வழியே செல்ல வேண்டும்? காரணம் அந்த கரிசல் பூமியின், பருத்தி வளம். இந்த சிறு கிராமங்களில் விளையும் பருத்தியை கொள்முதல் செய்து துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவே இந்த வழித்தடத்தை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். நகரங்களில் கிடைக்கும் விலையை விடக் குறைவான விலையிலேயே பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.<br /><br />முத்தையன், வண்டியை விடியும் முன் திருநெல்வேலி சந்தையில் சேர்த்து விட வேண்டும் என்று காளைகளை விரட்டிக் கொண்டிருந்தான். முத்தையனுக்கு வயது இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம். குழைத்த களிமண் போன்ற நிறம். எடுப்பான காதுகள், உடலின் நிறத்திற்கு ஒவ்வாத நிறத்தில் கண்கள். நெற்றியின் இரு புறத்திலும் ஏறிய தலைமுடி, தீபகற்ப இந்துஸ்தானத்தின் வடிவில் இருந்தது. வண்டி நகருக்குள் நுழையும் போது விடிந்திருந்தது.<br /><br />"வண்டியில என்ன?"<br />"பருத்தி பொதியிங்க எசமான். ஊரில விளைஞ்சது, சந்தைல நல்லா விலை போகுமுன்னு கொண்டாந்தேன்"<br />"எந்த ஊரு?"<br />"கங்கை கொண்டான்"<br />"அப்போ நல்ல பருத்தி தான். நல்ல விலை கிடைக்கும், ஆனா இந்த சின்னக் கோனான் கண்ணில மட்டும் பட்டிராதே. ஆமா உன் பேரு என்ன?"<br />"முத்தையன்."<br />"முத்தையன்.... ?"<br />"....."<br /> "ஓ.. சொல்லக் கூடாத இனமோ.. போ போ ?"<br /><br />முத்தையன் ஒரு எண்ணெய்க் கடைக்கு எதிரில் இருந்த நிலத்தில் மூடைகளை அடுக்கி கடை பரப்பினான். சிறிது நேரத்தில், அரசாங்க அதிகாரி போல் தோற்றம் கொண்ட ஒருவன் வந்து மூடைகளை நோட்டம் விட்டான். இருவரும் பேரத்தில் இறங்கினர்.<br />"அந்த வெலை ஆகாது எசமான். இந்த விலைக்கு தொரைமாருங்க கிட்டயே விட்டுருப்பேனே"<br />"அட.. உன் பஞ்சு இதுக்கு மேல பெறாது. துரைக்கு தெரியாத பருத்தி ரகமா?"<br />"இது நயம் பருத்தி. சீமை முழுக்க தேடினாலும் இந்த மாதிரி கிடைக்காது"<br />"இந்த விலைக்கு தந்தா வாங்குறேன். இல்லை போய்ட்டே இருக்கேன்" என்று சொன்னவன் சென்று எண்ணெய்க் கடையில் போய் உட்கார்ந்து கொண்டான்.<br /><br />சற்று நேரத்தில் இரு காவலர்கள் வந்தார்கள்.<br />"என்னடா விக்கிறே?"<br />"பருத்திங்க"<br />"அது தெரியிது. இது என்ன?"<br />"எலிங்க. வீட்டில வளர்த்தது, அதுவும் விக்கத்தான்"<br />"நெல்லு வெளையுற ஊரு இது. எலிக்கறி யாரு வாங்குவா? அது சரி, இங்க கடை போட அனுமதி வாங்கினியா?"<br />"இல்லைங்க."<br />"அப்போ கிளம்பு. எந்திரி.."<br /><br />அதற்குள், எண்ணெய்க் கடையில் இருந்த அதிகாரி அவர்களை கூப்பிட்டு ஏதோ சொன்னார். அவர்கள் அவனை விட்டு நகர்ந்து சென்றார்கள். ஆனால் அந்த அவன் மேல் ஒரு கண் வைத்தபடி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.<br />உச்சி வரை, வந்த வியாபாரிகள் எல்லாம் வெறும் பேரத்துடன் முடித்துக் கொண்டனர். கொண்டு வந்திருந்த கஞ்சியை குடித்து விட்டு, சிறிது நேரம் உறங்க ஆரம்பித்தான். அதிகாரி, கிளம்பி வெளியே சென்றிருந்தார். தூங்கிக் கொண்டிருந்தவனை ஒருவர் எழுப்பி, நல்ல விலையில் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஆனால் அதற்குள், அந்த இரு காவலர்கள், எண்ணெய்க் கடையைக் காட்டி ஏதோ சொல்லவே அவரும் எதுவும் சொல்லாமல் கிளம்பிக் கொண்டார்.<br /><br />சிறிது நேரத்தில் அதிகாரி வந்தார். மேலும் சிலர் கடைக்கு வந்து வந்து சென்று கொண்டிருந்தனர். எதிர்க் கடையில் இருந்த அதிகாரியைக் கண்டு நகர்ந்து சென்று விட்டனர். இதற்க்கு மேல் எதுவும் விற்காது என்று தெரிந்து, அதிகாரியிடமே சென்று விற்பதாக கூறினான்.<br /><br />"சரி. அந்த வண்டியில மூட்டையை ஏத்து. தொரை வந்து பணம் கொடுப்பார்"<br /><br />"ஏய்.. எங்களுக்கு தெரியாம எப்படே எலிங்கள வித்தே. யாருடே வாங்கினா?" என்று கேட்டுக் கொண்டே அந்த இரு காவலர்களும் உதவ முன் வந்தார்கள்.<br /> "வேண்டாம். நானே ஏத்தி வச்சிருதேன்." என்று மறுத்து விட்டான்.<br /> <br />ஒவ்வொரு மூடையிலும் ஒரு லத்தி நுழையும் அளவு ஒரு துளை இட்டு, குப்புற அந்த மூடைகளை அவன் ஏற்றுவதைக் கண்டு விட்ட அவர்கள்,<br />"இந்த ஓட்டையில, சிந்துற பஞ்சிலையா எங்க தொரை நஷ்டமாவப் போறாரு!" என்று சிரித்துக் கொண்டார்கள்.<br /><br />"வெல்டன் சின்ன கோனார்.. " என்றபடி துரை அந்த அதிகாரியைத் தட்டிக் கொடுத்தார். முத்தையன் இருவரையும் அமானுஷ்யமாக வெறித்துக் கொண்டிருந்தான்.<br /><br />(அடுத்த பகுதியில் கரியன் வந்து நிறைவு செய்வான்)Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-71148885078780939612011-11-02T20:49:00.004+05:302011-11-02T22:18:09.172+05:30கொடைப் பழிசிங்கிகுளம் பேச்சியம்மன் கோயில்ல ஐப்பசி கொடை. ஊர்ல உள்ள ஒவ்வொரு ஊட்லயும் சொக்காரவுக கூட்டம் நிறைஞ்சு இருந்தது. நாளைக்கு முதக் கொடை. அன்னைக்கே கிடா வெட்டு முடிஞ்சுடும். கடைசி நாள் கிடா வெட்னா, கறி திங்க யார் இருப்பா. அதான் முத நாளே வெட்டிர்றது. ஆனாலும் நம்ம ஆளுக என்ன லேசுப்பட்டவுகளா? கிடா வெட்னதும், கொடை முடிஞ்சதுன்னு அடுத்த வண்டில நடையைக் கட்டிர்றது. இந்த சொக்கரவுக கூட்டம், கிடா வெட்டபாக்கதுக்குன்னா வருதுன்னு நெனைக்கிரீக. கல்யாண வயசுல குமரியவோ, பயலையோ வச்சிருக்கவுக, அதுக்கு ஏத்த வரனா பாத்து பேசிக்க தான் வாரது. பேசி முடிக்கதுக்குன்னு அவுக ஊர் பெரியவுகளயும் கூட்டியாறதும் உண்டும். இந்த வாட்டி, எம்புட்டு கல்யாணம் பேசி முடிக்கப் போறாவுகன்னு ஊரே கணக்கு வச்சுக்கும்.<br /><br />எசக்கி, இந்த நாளுக்கு தான் காத்து இருந்தான். சிங்கிகுளம் பள்ளியூடத்தில பத்தாப்பூ, இந்த வருஷன் தான் முடிச்சான். "மேல படிக்கனும்னா விளாகத்துக்கு தான் போவனும். ஒரு வருஷம் பொறு. இந்த தையில, அக்காளுங்க ரெண்டையும் கட்டிக் கொடுத்துட்டு, விளாகத்துக்கே போயிடுவோம்"னு அம்மை சொன்னதுக்கு சரின்னு தலையாட்டிட்டு வீட்லேயே, ஆடுகள மேச்சிட்டு கிடக்கான். பெரியவா செவாமி பத்தாப்பூ முடிச்சுட்டு சும்மா தான் இருக்கா. சூட்டியான பிள்ள. காட்டு வேலைக்கு நாலு பெற கூட்டி போறதும் ஒண்ணுதான், செவாமிய ஒத்தையா கூட்டி போறதும் ஒண்ணுதான். மூக்குக்கும் முழிக்கும் பஞ்சமில்லை. என்ன வாய்தான் நீளும். அதுவும் தங்கச்சி தேவானைட்டன்னா இன்னும் அதிகமா. தேவானையும் அளகு தான். இருட்டுல பார்த்தா அக்க யாரு தங்கச்சி யாருன்னு சொல்ல முடியாது. ஒரு வருஷம் தள்ளி பிறந்ததுக. செவாமி அளவுக்கு, தேவானைக்கு நிறம் கிடையாது பாத்துக்கிடுங்க. சோவை வந்தாப்பில, வெளிறி இருப்பா. நம்ம மண்ணுக்கு ஏக்காத நிறமோ என்னமோ, காட்டுக்கு போனா உச்சிக்குள்ள சீக்கு வந்த கோழியாட்டம் தல தொங்கி போகும். வாயும் அதிகமா பேச தெரியாது. படிப்பும் எட்ட தாண்டல. செவாமி, அவள உடம்பு செத்தவா, ஒத்த பிள்ளைக்கு தாங்க மாட்டானுல்லாம் பேசுவா. அம்புட்டுக்கும் ஒரு வாய் பேசாது தேவானை.<br /><br />விளாகத்தில, செவாமியோட அம்மைக்கு ஒண்ணு விட்ட அண்ணன் ஒருத்தன் இருக்கான். அவன் மவன இந்த கொடையில பேசி முடிக்கறதா பேச்சு இருந்துச்சு. அவுகளும் வந்தாக. பேசியும் முடிச்சாக. சும்மாவே கிடந்தது சலம்புற செவாமிக்கு, சலங்கையும் கட்டி விட்டாப்ல ஆச்சு. "நான் என் நாலாவது பிள்ளைக்கு பேறு காலத்துக்கு வார மட்டும், இவளுக்கு கல்யாணம் ஆகாது. இடுப்பு செத்தவள எவன் கட்டுவான்". இம்புட்டு வார்த்தைக்கும் ஒரு பேச்சு வரல, கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல தேவானைக்கு. பழவிப்போச்சோ என்னமோ?<br /><br />ரெண்டாம் கொடை. அறுத்த கெடா, துண்டு துண்டா நார்க் கட்டில்ல காயுது. ரவைக்கு கும்பாட்டமும், குறவன் கூத்தும். கும்பாட்டத்துக்கு வாரியான்னா, "விளாகத்துக்கு கட்டிக் கொடுத்தப்பொறவு, கும்பாட்டத்தை நான் ஏன் பாக்கணும். இனிமே ஜினிமா தான் பாப்பேன்"னு நீட்டுனா செவாமி. "இன்னும் கட்டிக் கொடுக்கலல்லா.. வரலாம் வா" ன்னான் எசக்கி. "குடுத்தாதான் ஆச்சா? இன்னிக்கின்னு இல்ல, இனிமே இந்த பட்டிக்காட்டு பாட்டு எல்லாம் எனக்கெதுக்கு. வேணுமினா இந்த வெங்கொரங்க கூட்டிப்போ"ன்னு தேவானைய காட்டுனா. கும்பாட்டத்துக்கு பொறவு, அம்மையோட தேவானைக்கா, வீட்டுக்கு போயிருச்சு. வருஷா வருஷம், எசக்கியயும் இழுத்துட்டு போறவ, இந்த வாட்டி வாறியான்னு கூட கேட்காம போயிட்டா. குறவன் கூத்துக்கும், உட்கார்ந்துட்டான் எசக்கி. கூத்து போவ போவ, ஏன் அம்மை இம்புட்டு நாள் நம்ம பாக்க விடலன்னு புரிஞ்சு போச்சு எசக்கிக்கு. நாம பெரியவனாயிட்டோம்னு சந்தோசத்திலேயே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.<br /><br />மூணாம் கொடைக்கி, சொரிமுத்து ஐயனார் வில்லுபாட்டு. வீட்டு வாசல்ல ஒலி பெருக்கி, இடி விழுந்தாலும் என் சத்தம் மட்டும் தான் உங்க காதுல விழணும்னு அலறிக்கிட்டு இருக்கு. செவாமிய தவிர எல்லாரும், வில்லு கச்சேரில இருந்தாக. மறுநாள், ஆட்ட ஓட்டிக்கிட்டு மலைக்கு மேய்ச்சலுக்கு கிளம்பினான் இசக்கி. "ஏல இசக்கி, இந்தா இத சூட்டு பாறைல போட்டு எடுத்து வந்துடு"ன்னு ஒரு பெரிய தூக்கில, ரெண்டு நாள் கட்டில்ல கிடந்த கறிய நிரப்பி அனுப்புனா.<br /><br />ஒரு காலத்தில, சூட்டுப் பாறை கறிக்காக, ஊரே சட்டிய தூக்கிட்டு மலைக்கு வந்துடும். வெயில்ல கிடந்த கறி காஞ்ச கறி, சூட்டுப் பாறைக்கறி, வெந்த கறி. அவ்வளவு மெதுவா ஆக்கிப்புடும் கறிய. இப்போ ஒண்ணு ரெண்டு பேரு போட்டு எடுக்கரதுண்டு. சூட்டுப் பாறை பக்கத்தில தான், மொட்ட முத்து குடியிருக்கான். ஒரு காலத்தில சிங்கிகுளத்தில வாழ்ந்த குடும்பம் மொட்ட முத்து குடும்பம். ஏதோ தப்பு பண்ணிட்டான்னு துணி இல்லாம மொட்டையா ஊர விட்டு அவன அனுப்பிட்டாக. அன்னையிலிருந்து அவன மொட்ட முத்துன்னே ஊரு கூப்டுச்சு. அதுக்கு பொறவு, அவன் ஊருக்குள்ள வரவே இல்ல. அங்கேயே ஆடு மாடு மேச்சுட்டு கிடக்கான். "ஏல.. அந்த மொட்ட முத்துட்ட எந்த பேச்சும் வேணாம் என்னா?" அம்மை சொல்லி அனுப்பினா. இப்படியா ஒரு வாரம் போச்சு. கார்த்திகையும் பொறந்தாச்சு.<br /><br />அதுக்குள்ள, தேவானை பொறக்கடிக்கு போய் திரும்பியும் வந்திட்டா. அவ வந்த மூணாம் நாள், செவாமி போகணும் அது கணக்கு. ஆனா போகல. நாலாம் நாளு, சீனி பலகாரமா வாங்கி செவாமி வாயில அம்மை திணிச்சா. ஐஞ்சாம் நாளு, கம்மாத் தண்ணிய கணவதிக்கு குடம் குடமா இறைக்கச் சொன்னா. காலையில இறைச்சவா, மாலையில பேச்சியம்மன் கோயிலுக்கும் போயிட்டு வந்துட்டா. ஆறாம் நாளு, "ஏட்டி செவாமி, சங்கரி சித்தி வீட்ல இருந்து அம்மி வாங்கியாரியா. அம்மி கொத்தி நாளாச்சுடி. அறைபடவே மாட்டேங்குது". அடுத்த தெருவில இருந்து, அம்மிக்கல்ல வாங்கி இடுப்பில தூக்கிக்கிட்டு ஊரு பாக்க வீட்டுக்கும் வந்துட்டா செவாமி. வந்த கல்லு மூலைக்கு ஒடுங்கிடுச்சு, செவாமி ஒடுங்கல, நடுக் கூடத்தில உட்கார்ந்து கிடக்கா.<br /><br />"செவாமி, அம்மிக்கல்ல தூக்கியாரத பாத்தோம், அதான் என்னன்னு கேட்டுப் போகலாம்னு வந்தோம்" னு ஊரு வீட்ல சேர்ந்திருச்சு.<br /><br />மறுநாள், திருகார்த்திகை, வீட்ட மொழுகி கோலம் போட்டுட்டு, "ஏல எசக்கி, அக்காளுக்கு உடம்பு முடியல. டவுனுக்கு போயிட்டு ரவைக்கு வந்திரலாம் வாயா" ன்னு அம்மை கூப்பிட்டா. 'விளாகத்துக்கு போனா போதாதா? ஏன் டவுனுக்குன்னு' எசக்கிக்கு புரியல. ரவைக்கு திரும்பி வந்தப்போ, வீட்ல தேவானைய காணோம். "எய்யா, மவளக் காணோமே. எங்க போனா" ன்னு அம்மை கேட்கறா. அஞ்சாறு வருஷமா, திண்ணைய தாண்டி வீட்டுக்குள்ளயே வராத ஐயாவுக்கு, மவ உள்ள இருக்காளா, வெளிய போய்ட்டாளான்னு எப்படி தெரியும். ஊர் முழுக்க தேடியும் தேவானைய காணல.<br /><br />மறுநாள், வீட்ல இருக்கா முடியல எசக்கிக்கு. ஆடுகள ஓட்டிட்டு மலைக்கு வந்துட்டான். மொட்ட முத்து குடிசைல யாரும் இல்ல. உள்ள போட்டது போட்ட படிக்கு இருக்கு. கொஞ்சம் கடுதாசிகளும் கிடைச்சுது. எல்லாத்திலையும் தேவானக்கா கையெழுத்து தான். ஒன்னொன்னா படிக்கான்.<br />"ரவைக்கு கிளம்பி இரும். அவுக வாரதுக்குள ஊர விட்டு போய்டுவோம் - தெய்வானை"<br />"எசக்கி கிட்ட எதையாவது பேச்சை கொடுத்து ஒளறி கெடுத்துடாதீக. வாய மூடி இரும் -தெய்வானை"<br />"இன்னைக்கு குளிச்சிட்டேன். பயமில்ல - தெய்வானை"<br />"வில்லு கச்சேரிக்கு, போகல. வீட்ல நான் மட்டுந்தான். வந்தா சொகமுண்டும் -தெய்வானை"<br />"செவாமிக்கு கல்யாணம் பேசியாச்சு. அடுத்து நம்ம கல்யாணம் தான் - தெய்வானை"<br />"நல்ல வேல, என்னைக் காமிச்சு குடுத்திருவீரோன்னு பயந்துட்டேன். மொட்டையாக்கினாலும், வெளில சொல்லல பாத்தியளா. அதான் உம்ம கிட்ட எனக்கு பிடிச்சது - தெய்வானை"Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-6185548299087416932011-11-01T23:40:00.001+05:302011-11-01T23:48:59.772+05:30பின்னோக்கி நட"இந்த தடவையும் ஊத்திக்கிச்சா."<br /><br />மும்பை நகரின் பிரதான ஐந்து நட்சத்திர ஓட்டலின் இருண்ட பாரின் ஒரு மேஜையில் ஒருவன். இந்த முறை தன் காதலை அவளிடம் சொல்லியே தீர்வது என்ற முடிவுடன் வந்து அமர்ந்திருந்தான். இந்த நாளை விட்டால் பின்பு என்று அவளைப் பார்ப்பானோ அவனுக்கே தெரியாது. அடுத்த ப்ராஜெக்ட் அவளோட கிடைச்சா தான் அடுத்த சான்ஸ். அவளிடம் செல்ல எழுந்தான். அதற்குள் மற்றொருவன் புகுந்து விட்டான். நகராமலா போவான், நகர்ந்ததும் அவளிடம் சொல்லி விடலாம். நகர்ந்தது அந்த மற்றொருவனின் கரங்கள் அவள் இடையில். இவன் நகர்ந்து விட்டான்.<br /><br />அதே மும்பை நகரின் அதே ஓட்டலின் இருண்ட பாரில் மற்றொரு நாளில், அதே மேஜையில் ஆனால் மற்றொருவன். எல்லாரும் நல்லா தானே இருக்குன்னு சொன்னங்க. பின்ன ஏன்? இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியல பாஸ். அவங்களுக்கு எப்போ எது பிடிக்கும்னு சொல்ல முடியாது. பின்ன இந்த மக்களுக்காக நான் ஏன் கஷ்டப்படணும். கஷ்டப்படமாட்டேன்னு முடிவு எடுத்தான். இவனால வந்த கஷ்டத்தைக் கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டிய அவசியம் தான் மக்களுக்கு என்ன?<br /><br />அப்போதான் அவங்க ரெண்டு பெரும் அவங்கவங்க தோல்வியிலிருந்து விடுபட பின்னோக்கி நடக்க ஆரம்பிச்சாங்க. அதாங்க சினிமாலலாம் வருமே flashback. அதாவது அவங்க சந்தோசமா இருந்த காலத்து நிகழ்வுகளை அசை போட்டுட்டே நிகழ் காலத்தை ஓட்டிரறது. இவங்க பின்னோக்கி நடக்க ஏதுவா காலமுமா சினிமால வார மாதிரி அசையாம நிக்கும்? அது பாட்டுக்கு முன்னோக்கி போய்க்கிட்டு இருக்குது. இவங்களும் முன்னுக்கும் பின்னுக்குமா மனசும் காலமும் இழுத்த இழுப்புக்கு போனாங்க. இப்போ கதைக்கு வருவோம். அவங்க பின்னோக்கி போறாங்க, காலம் முன்னோக்கி போகுது. நிகழ்காலத்தில் இதை படிக்கிற நீங்க தான் எது முன்னே நடந்தது எது பின்னே நடக்க போறதுன்னு முடிவு பண்ணிக்கணும். என்ன குழப்பிடும்னு பயப்பட்றீங்களா? இவங்க யாரு என்ன கதைன்னு தெரிஞ்சுக்கணுமா. தொடர்ந்து படிக்கறத தவிர வேற வழியில்லை பாஸு. நீங்க தான் அலெர்ட் ஆச்சே, ட்ரை பண்ணுங்களேன்.<br /><br />"இந்தக் கதை நிச்சயமா தோற்காது. ஜெயிக்கறதுக்கு தேவையான எல்லா மசாலாவும் சேர்த்து பண்ணி இருக்கேன்."<br /><br />"கதையை சொல்லிடறேன். கேட்டும் புரியலன்னா பின் நவீனத்துவம் மாதிரி வேற ஏதாவது வார்த்தை சிக்காமலா போயிடப் போறது?"<br /><br />"ஏம்பா.. யாரோ கதை சொல்ல வந்துருக்காங்க. வந்து என்னன்னு கேளு" என்றபடி அப்பா வெளியே சென்று விட்டார்.<br /><br />"பெருசோ சிறிசோ, இருக்கிற நிலைமைல எதையாவது கேட்டு மனசு நோகும்படி ஏதாவது சொல்லிராத" அம்மாவை அப்பா எச்சரித்தார். எந்த ஊர்ல பொம்பளைங்க, புருஷன் சொல்றத கேட்டாங்க?<br /><br />"வாழ்க்கைன்னா வெற்றி தோல்விகள் வந்து போகத்தான் செய்யும். இதுக்காக அடுத்த கதைக்கு போக மாட்டேன்னா எப்படி?" என்றாள். அவளுக்காக அடுத்த கதை.<br /><br />"குடும்பத்துக்குள்ளேய ஒருத்தருக்கொருத்தர் காலை வாரிக்கறான்களே" என்று அங்கலாய்த்தாள்.<br /><br />"கதையை எப்படி வேணா முடிக்கலாம். ஆனா அமங்கலமா தொடங்க வேண்டாமே"<br /><br />"இந்த கதை ஜெயிக்கிதோ இல்லையோ, இதை வச்சே அவள மடக்கிடலாம்" என்பதற்காகவே இந்த படம்.<br /><br />"புரியலைனா கடைசி நேரத்தில் ஸ்லைடு போட்டு சொல்லிட்டா போகுது"<br /><br />"இந்தக் கையை இன்னும் கொஞ்சம் மேல, அழுத்தமா கூச்சப் படாம வைக்கணும். இது என்ன முதப் படமா? இந்தா நான் எப்படி பண்றேன்னு பாருங்க. இப்படி இப்படி"<br /><br />"இந்த கதை நெறைய பேருக்கு புரியாதுன்னு நெனைக்கிறேன். ஜெயிக்குமா?"<br />"ஜெயிக்கறதுக்கு படம் எடுக்கறது அந்தக் காலம், இப்போ படம் எடுக்கறது வேற வேற காரணங்களுக்கு"<br /><br />"இன்னைக்கு நைட் பார்ட்டி. படம் நல்லா வந்திருக்கு. எல்லாரையும் கூப்டிருக்கேன். நீயும் வந்திடு"<br /><br />"உங்க முன்னாடி எப்படி எனக்கு கொஞ்சம் வெட்கமா இருக்கு"<br /><br />"ஜீரோ டிகிரி ரொம்ப பிடிக்குமாமே. என்கிட்டயும் அதே மாதிரி ஒரு கதை இருக்கு சொல்லட்டுமா?"<br /><br />"படம்னு வந்துட்டா, கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"<br /><br />"உங்ககிட்ட நான் தனியா பேசணும். ராத்திரி பார்ட்டில பேசலாமா"<br /><br />"எல்லாம் கதை தானே"<br /><br />டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்தார். "மொத்தமா கதைல அஞ்சு பேர். டபுள் ஹீரோ சப்ஜக்ட். அவங்களோட காதலி. அவங்களோட அம்மா அப்பா." ஹீரோ "அஞ்சு பேர்னு சொன்னே. எட்டு பேர் வர்றாங்களே". "கதையை முழுசா சொல்லிட்டா இந்த குழப்பம் வராது. இரண்டு தனித்தனி காதல் கதைகள் இணை கோடுகள். அந்த கதையில், இரண்டு காதலையும் இணைக்கிற மாதிரி இணைப்பா ஒரு உறவு வரும் போது, அது ப வடிவ காதல் கதை. இப்போ கதைக்கு தேவை ஆறு பேர் தான் இல்லையா. இணையாத அந்த இரண்டு முனைகளும், கோட்டால் இணைக்கப் படாது, புள்ளியில் இணைந்தால். மொத்தமா அஞ்சு பேர் தான் படத்தில. கதையும் முக்கோணக் காதல் கதை." "இது எந்த இங்கிலீஷ் படத்தில் இருந்து சுட்டது." "அட இது நம்ம சொந்தக் கதைப்பா" என்று முடித்தார் டைரக்டர்.<br /><br />"கட்"Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-76819036975018904262011-11-01T19:35:00.001+05:302011-11-01T20:13:35.549+05:30ஒரு வயசு புத்திசாலிதூக்கத்தில் இருந்து கண் விழித்து பார்க்கிறேன், எல்லாமே மாறி இருக்குது. இது எங்களோட இடம் இல்ல. எங்களோடதுன்னா, நான், அம்மா, அப்பா, சித்தி, பெரியம்மா, அக்கா, பாட்டி இப்படி எங்களோடது. அவங்களும் கூட இங்க இல்ல. நான் எப்படி இங்கே வந்தேன்னு எனக்கு தெரியல. ஆனால் இப்படி ஒரு நாள் நடக்கும், அப்படி நடக்கும் போது நான் என்ன செய்யணும்னு எனக்கு எங்க அப்பா சொல்லிக் கொடுத்திருக்கார். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நெனைச்சு பார்க்கல. பொதுவாவே எனக்கு எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கிறது அம்மா தான். ஆனா இந்த ஒரு விஷயத்தை மட்டும் அப்பா சொல்லி இருக்கார். மறுபடியும் மறுபடியும். இதை தவிர அப்பா எனக்கு வேற எதையும் சொன்னதா ஞாபகம் இல்ல. அப்படி எனக்கு என்ன வயசாயிடுச்சு. மிஞ்சிப் போனா ஒரு வயசு இருக்குமா. ஐயையோ கதையோட சஸ்பென்ச சொல்லிட்டேனோ. பரவாயில்ல. இதுவே வேற யாராவது இருந்தா இந்நேரம் அழுது இருக்கணும். நான் அழறேனா? இல்ல. இந்த ஒரு வருஷமா எனக்கு அம்மா கொடுத்த அறிவும், நம்பிக்கையும் வீண் போகாது. கண்ணைத் தொட்டு பார்க்கிறேன். இல்ல அழல. இப்போ முத வேலையா அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டு பிடிக்கணும். எங்களுக்கு வேண்டாதவங்க யாரோ தான் இந்த காரியத்த செஞ்சிருக்கணும். எழுந்து கொஞ்ச தூரம் நடந்து போகிறேன்.<br /><br />நான் அங்கே இருந்தவரை, எழுந்ததும் ஏதாவது சாப்பிட இருக்கும். இன்னும் அப்பா அம்மா மாதிரி கடின உணவு வகைகளை சாப்பிட பழகல. எனக்குன்னு அம்மா மென்மையா எதோ சாப்பிடக் கொடுப்பாங்க. அது பேர் கூட எதோ.. அட மறந்துடுச்சே. உங்களுக்கு தெரியுமா? நான் என்ன சாப்டுவேன்னு, சொல்லுங்களேன். இல்ல அதெல்லாம் இல்ல. நீங்க சொல்ற எதுவுமே இல்ல. அது பேரு வேற எதோ. ஒரு நிமிஷம், கடவுள்கிட்ட கேட்கலாமே. உங்களால எல்லாம் கடவுள் கிட்ட அவ்வளவு சுலபத்தில பேசிட முடியாது. ஆனா நான் நெனச்ச நேரத்தில, கடவுள் கிட்ட பேச முடியும். நான் வாங்கி வந்த வரம் அப்படி. என்னோட வயசு தான் காரணம்னு சொல்றீங்களா? இருக்கலாம். "ஹலோ கடவுளே. நான் சாப்பிடுற அந்த பொருள் பேர் என்ன?" "நான் சொல்ல மாட்டேன். எத்தன தடவ அம்மா சொல்ற எல்லாத்தையும் கேட்டு ஞாபகம் வச்சுக்கோ. என்னைக்காவது தேவைப் படும்னு சொல்லி இருக்கேன். நீ கேட்கல. நான் சொல்ல மாட்டேன். நீயா தெரிஞ்சுக்கோ" என்று சொல்லி விட்டு கடவுள் மறைந்து விட்டார். அம்மா சொல்லி இருக்காங்க, கடவுள்னாலே இப்படி தானாம். தேவை இல்லாதப்போ அட்வைஸ் கொடுத்துட்டே இருப்பாராம். ஆனா தேவைன்னு கேட்டா சொல்ல மாட்டாராம். கேட்டா திருவிளையாடல், லீலைன்னு கலாய்ப்பாராம். இன்னும் கொஞ்ச நேரம் நடந்து பாப்போம், ஏதாவது தென்படுதான்னு. அதோ அவர்கிட்ட கேட்டு பாப்போம்.<br /><br />இவரையும் எங்கேயோ ஒரு நாள் பார்த்திருக்கோமே. அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன். அவருக்கு என்ன புரிஞ்சதோ தெரியல. அவருக்கு நான் பேசற எதுவுமே புரியலன்னு நெனைக்கிறேன். அவர் என்கிட்டே கேட்டார்? "பசிக்குதா? என்ன சாப்பிடுவே?". நாசமாப் போச்சு. இவருக்கும் நான் என்ன சாப்பிடுவேன்னு தெரியல.ஏதோ இந்த மட்டுக்கும் புரிஞ்சதே. வர வர இந்த உலகத்தில முட்டளுங்களோட எண்ணிக்கை கூடிட்டே போகுது. எல்லாரும் எங்க குடும்பத்தில உள்ள அளவுக்கு புத்திசாலிங்க இல்ல. இவர் பாக்க கருப்பா மலையாட்டம் இருக்கார். ஆள் வளர்ந்தா மட்டும் போதுமா. "நீ என்ன சாபிடுவேன்னு எனக்கு தெரியலியே. இது சாப்பிடுவியா?". ஐயே.. இத யாராவது சாப்பிடுவாங்களா? இல்லைன்னு தலை ஆட்டினேன். "என்கிட்டே இது தான் இருக்கு. உன்னையும் விட்டுட்டு போயிட்டாங்களா? பயப்படாதே. உனக்கு வேற ஏதாவது வேணுமா?" என்று கேட்டார். நான் காலைக் காட்டி, கால் வலிக்குதுன்னு சொன்னேன். "நான் உன்னைத் தூக்கிக்கவா?" என்று கேட்டார். சரி என்று ஏறிக் கொண்டேன். "நல்ல பொதுக் பொதுக்குன்னு மெல்லிசா இருக்கியே" என்றார். "எங்க அம்மா இன்னும் சாப்டா இருப்பாங்க" "பொம்பளைங்க எல்லாருமே அப்படிதான்" என்றார். ஐயே என்ன இவர் வல்கரா பேசறார்.<br /><br />அதற்கு பின் அவரிடம் பேசவே மனசு வரல. இப்படிதான் பொம்பளைங்கள பத்தி கமன்ட் பண்றதா? அவர் எதோ கதை கதையா பேசிட்டே போனார். அப்பா சொல்ற அதே கத மாதிரி தான் இருந்தது. ஆனா வேற மாதிரியும் இருந்தது. அப்பா அளவுக்கு இவர் புத்திசாலியும் இல்ல. அப்பாவோட விஞ்ஞான அறிவு, என்னோட ஜீன்களில் இருப்பதால தான் நான் இந்த வயசிலேயே இவ்வளவு புத்திசாலியா இருக்கிறேன். இவர் இன்னும் பரிணாம வளர்ச்சியில பல படிகளைக் கடக்க வேண்டியிருக்கு. என்னோட அப்போவோட ஆராய்ச்சி மட்டும் வெற்றி ஆயிடுச்சுன்னா,எங்களோட சந்ததிகள் எல்லாருமே invisible ஆகிருவோம். அதுக்கு அப்புறம், இந்த கடவுள் இருக்காரே, அவர மாதிரி யார் கண்ணுக்கும் தெரியாம எங்க இஷ்டத்துக்கு வாழ்க்கைய வாழலாம். அவர மாதிரியே திருவிளையாடல், லீலைன்னு பண்ணிக்கிட்டு ஜாலியா பொழுது போக்கலாம். இது எல்லாம் நடக்கணும்னா, முதல்ல நான் உயிரோட இருந்து ஆகணும். அதுக்கு சாப்பாடு வேணும். "நிறுத்துங்க".அந்தா இருக்கு என்னோட சாப்பாடு.<br /><br />"ஹலோ, என்ன கேட்டிங்க. இதையா சாபிடுவேன்னா? நீங்க என்னை என்ன மனுஷன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கீங்களா. மனுஷங்கள் தோன்றதுக்கே இன்னும் சில ஆயிரம் வருஷங்கள் ஆகும். அந்த நேரத்தில எங்களோட சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிச்சு, நாங்க தான் அவங்கள ஆட்டி வைப்போம். எங்களோட அறிவு உங்க மனுஷங்கள விட, பல மடங்கு அதிகமா இருக்கும் அப்போ. உதாரணத்துக்கு இதையே எடுத்துக்கங்களேன். பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த எங்க இனத்தவர்களில் இளையவனான என்னோட அறிவையே, சரியா யூகிச்சு எழுத முடியாம இந்த மடையன் திணறிக் கிட்டுருக்கான். என்னைப் போய் மனுஷனான்னு கேட்டுட்டிங்களே. என்ன அவமானம். இன்னொரு தடவ அந்த மாதிரி கேட்டிங்கன்னு வைங்க, இப்போ உங்ககாலத்தில வாழ்ந்துட்டு இருக்கிற எங்க ஆளுங்க உங்கள ஒன்னும் இல்லாம ஆக்கிருவாங்க. ஜாக்கிரத. என்ன கடவுளே.. நான் சொல்றது சரி தானே?"<br /><br />"இந்த species க்கும், தான் என்கிற அகம்பாவம் வந்திருச்சே. இப்படி எத்தன இனங்கள அழிக்கிறது. தயவு செஞ்சு நீங்களாவது, நான் தான் புத்திசாலின்னு அகம்பாவம் பிடிச்சு அலையாதீங்க. ப்ளீஸ்" என்று கடவுள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறார்.Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-44689370558259553272011-11-01T17:56:00.001+05:302011-11-18T21:42:40.726+05:30கம்பன் வீட்டு கட்டுத் தறி"சினோரே! சினோரே! சீக்கிரம் எழுந்திருங்கள். உங்களிடம் ஒரு முக்கிய உதவிக்காக வந்துள்ளேன். எங்கள் பிரச்சனைகளை நீங்கள் மட்டுமே தீர்க்க முடியும். எழுந்திருங்கள்". சினோரே என்று விளிக்கப்பட்ட அந்த மனிதர் எழுந்து, தன்னை எழுப்பிய உருவத்தை நன்கு ஆராய்ந்தார். இளம் பச்சை நிறத்தில் செடி போன்ற உடலமைப்பைக் கொண்டிருந்த அந்த உருவத்திடம் "நீ யார்? உங்களது பிரச்சனை என்ன?" என்றார்.<br /><br />"சினோரே! நாங்களும் எங்கள் வம்சத்தவரும் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் எங்கள் பூர்விக இடத்தை எம்மிடம் மீட்டுத் தரக் கோரி உங்களிடம் வந்துள்ளேன்." செடியின் தண்டு போலிருந்த உடலமைப்பையும், கொத்து கொத்தாக இருக்கும் இலைக் கூட்டங்கள் போன்ற பசுமை வர்ணத் தலையும் கொண்ட உருவத்தையும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த அவர், "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். யார் நீங்கள்? கொஞ்சம் விளக்கமாக கூறு" என்றார்.<br /><br />"நாங்கள் வசித்து வந்த இடம், எங்களைப் போலவே பசுமையான குளுமையான இடம். பல தலைமுறைகளாக, இருந்த இடத்திலேயே உணவு, சுவாசிக்க காற்று என எங்களுக்கு தேவையான யாவும் கிடைத்ததால், நிலத்திலேயே காலூன்றி வாழ்ந்து வந்தோம்." 'இவைகள் செடிகள் தாம். வேர்களைக் கால்கள் என்கின்றன' என்று உறுதி படுத்திக்கொண்டார். அது மேலும் தொடர்ந்தது, "இவ்வாறு பல காலம் செழிப்பாக வாழ்ந்து வந்த எங்களுக்கும் ஒரு கெட்ட காலம் வந்தது. வசதி வாய்ப்புகளின் காரணமாக எங்களின் மக்கட்தொகை, கணக்கில் அடங்காமல் பெருகிற்று. எங்களுக்கு என்று இருந்த நிலப் பகுதி போதாமல் போக ஆரம்பித்தது. ஆயினும் நாங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வழமை இல்லாமையால், இருந்த நிலத்தில் நெருங்கி வாழ்ந்து வந்தோம். ஒரு கட்டத்தில், இடப் பற்றாக்குறையால் எங்களில் சிலர் எங்கள் கால்களை நிலத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு மிதக்க ஆரம்பித்தனர். அது வரை, நிலத்தில் கால் புதைத்தே வாழ்ந்து பழகிய அவர்களுக்கு, நிலத்தில் கால் புதையாமலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்தது. இவ்வாறாக எங்களின் மிகப் பெரிய பிரச்சனையான இடப்பற்றாகுறைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தோம்." 'என்ன? செடிகள் நிலத்தில் இருந்து விடுபட்டு உயிருடன் வாழ முடியுமா? அதிசயமாக அல்லவா இருக்கிறது!' "சரி. உங்கள் பிரச்சனைகளைத் தான் நீங்களே தீர்த்துக் கொண்டாயிற்றே. நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார்.<br /><br />"சினோரே! எங்கள் தலையாய பிரச்சனை அதன் பின் தான் ஆரம்பித்தது. எங்கள் உலகத்தில், உங்கள் உலகம் போல் இல்லாமல், மூன்று நிலவுகள் உண்டு. ஒன்று தங்க நிறத்திலும், ஒன்று வெள்ளி நிறத்திலும், மற்றொன்று கரு நிறத்திலும் இருக்கும். வெளியில் இருந்து கிடைக்கும் வெளிச்சம் எங்கள் உணவு தயாரிப்புக்கு போதுமானதாக மட்டுமே இருந்து வந்தது. உங்கள் உலகில் வரும், அமாவாசை, பௌர்ணமி போல் நிலவுகள் வருவதும் போவதும் உண்டு. பௌர்ணமியின் போது, எங்கள் நிலவுகள் ஜொலிப்பதை நாங்கள் கண்கொட்டாமல் ரசித்து வந்தோம். எங்கள் நிலவுகளில் மூன்று வண்ணங்கள் உள்ளமையால், எங்கள் பௌர்ணமி உங்களுடயதைக் காட்டிலும் ரம்மியமாக இருக்கும். எங்கள் கருப்பு பௌர்ணமி, உங்களவர்கள் இதுவரைக் கண்டிராத ஒன்று. உங்கள் அளவுக்கு வான சாஸ்திர அறிவு எம்மவர்களுக்கு இல்லையா? அல்லது எங்கள் நிலவுகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருவதில்லையா எனத் தெரியவில்லை. எத்தனை காலத்திற்கு ஒரு முறை பௌர்ணமி வரும் என்று எங்களால் அறுதியிட்டு கூற முடியவில்லை.நாங்கள் உங்களிடம் கேட்கும் முதல்உதவி இதுதான். எங்கள் பௌர்ணமி எத்தனை காலத்திற்கு ஒரு முறை வரும் என்று கண்டறிந்து கூற வேண்டும். எங்களுக்கு சூரியன் இல்லாததால், நாள் என்ற கணக்கும் தெரியாது. எங்களது இரண்டாவதும் மற்றும் முக்கியமானதுமான உதவி .... " "பொறு. நான் எப்படி உங்கள் உலகத்தின் கால அளவுகளைக் கணிக்க முடியும். நீ சொல்வது போன்ற ஒரு உலகத்தை நான் இதுவரை என் தொலைநோக்கியில் கூட கண்டதில்லையே. நான் பைசா நகரத்தை விட்டு ரோமிற்கு வந்தது இந்த கோபர்நிகசுக்கு ஆதரவு தெரிவித்து, சர்ச்சின் தாகுதலில் இருந்து அவனை காப்பாற்ற மட்டுமே. நான் அவன் போல், வானவியல் அறிஞன் இல்லை. நீ வேண்டுமானால், அவனிடம் சென்று கேட்டுப் பாரேன்" என்று சொல்லி கழற்றி விடப் பார்த்தார்.<br /><br />"சினோரே.. நாங்கள் உங்களைக் கண்டு கொள்ளவே மிகுந்த சிரமப் பட்டோம். நீங்கள் எங்கள் மீதக் கதைகளையும் கேளுங்கள். நிச்சயம் உங்களால் எங்களுக்கு உதவ முடியும் என்றே நம்புகிறோம்." 'இது நம்மைவிடாது' போலிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டார். "சரி செய்கிறேன். ஆனால் இந்த நாள் கணக்கை கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" "நன்றி சினோரே, எங்களது இரண்டாவது உதவி என்ன என்று தெரிந்தால் இந்த கணக்கு எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொள்வீர்கள். உங்கள் உலகில், வானில் நடக்கும் மாற்றங்களைக் கொண்டு உலகில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணிப்பீர்கள் அல்லவா. அதே போன்றே எங்கள் உலகிலும், இந்த நிலவுகள் வரும் காலங்களில் கொத்து கொத்தாக நாங்கள் காணாமல் போகிறோம். எனவே எங்களைப் பாதுகாக்க இந்த நிலவு வரும் காலம் எம்மவர்க்கு தெரிய வேண்டியது அவசியமாகிறது. எங்களால் நிலவு வரும் காலத்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக, நாங்கள் நிலத்தில் இருந்து கால் விடுத்துக் கொண்ட பின், எங்கள் ஆகாயம் கலங்கி விட்டது. நிலவுகள் வருவதை எங்களால் முன்பு போல் காண முடிவதில்லை. மிதக்க ஆரம்பித்ததன் இரண்டாம் பக்க விளைவுகள் இவை. நிலவுகள் சில காலமாக, நீங்கள் இங்கு வந்த காலம் முதல் அடிக்கடி வர ஆரம்பித்துள்ள்ளன என்று எண்ணுகிறோம். இவ்வாறே சென்றால் எங்கள் வம்சம் முழுவதும் அழிந்து விடும் என்று நாங்கள் அச்சப் படுகிறோம். எங்களில் சிலர் எங்கள் பூர்விக பூமியை விடுத்தது வேறு இடம் செல்லவும் முடிவு செய்துள்ளனர். எனவே நீங்கள் .. " என்று சொல்லிக் கொண்டே சென்றது. கலிலியோவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் வான சாஸ்திரம் புரிய ஆரம்பித்தது.<br /><br />கலிலியோ ரோமிற்கு வந்த நாள் முதல், இத்தாலிய சேசு சபையின், ரோபர்ட் பெல்லர்மினின் விருந்தினர் அறையில் தங்கி வருகிறார். அந்த காலங்களில், தங்கமீன் வளர்ப்பு இத்தாலியில் பிரபலம் ஆகி இருந்தது. அவர்கள் வழக்கப் படி, விருந்தினர்களின் படுக்கைக்கடியில், பளிங்கு தொட்டிகளில் மீன் வளர்ப்பார்கள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கலிலியோ எழுந்து, படுக்கைக்கடியில் பாசி படிந்திருந்த மீன் தொட்டியை வெளியில் இழுத்தார். தொட்டியில் இருந்த பாசி படிந்த நீரை மாற்றி விட்டு, தங்கம், வெள்ளி மற்றும் கருமை நிறத்தில் இருந்த மீன்களை மீண்டும் தொட்டியில் விட்டார்.Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-51710444141040605002011-10-20T01:02:00.000+05:302011-10-20T11:10:04.883+05:30உடனே கிளம்பி வரவும் -3அவர்கள் பேசிக் கொண்டதன் படி, புருஷோத்தமன் நாளை காலை வந்து அதன் பின் முடிவு எடுக்கலாம் என்று இருந்தது. ஒருவேளை புருஷோத்தமன் விரைந்து வந்திருப்பாரோ? இல்லை. விளக்குகள் எரிய வில்லை. வேறு எதோ? யாரும் அம்பிக்காக காத்திருக்க வில்லை. பின் யார் எங்கே வரச் சொல்லியிருக்கக் கூடும். அப்பாவாக இருக்குமோ? என்று யோசித்த அம்பி, அங்கே சென்றான். அப்பா அங்கே உயிருடன் இல்லை. அவர் உடல் வெப்ப நிலையில் இருந்து அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆகி இருக்க வேண்டும் என்று தெரிந்தது. உறைந்து நின்றான். <br /><br />சில நிமிடங்களில் அனைவரும் கூடி விட்டனர். "என்ன பேசிக் கொண்டீர்கள்?" என்றான் அஜித். "எதுவும் பேசவில்லை". "எதுவும் பேசவில்லை என்றால் இந்த நேரத்தில் இங்கு எதற்கு..." "ஒரு தந்தை மகனுக்கு இடையில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும் பேசுவதற்கு. நீ அதைக் கேள்வி கேட்க வேண்டாம்." "கொலை செய்வதும் அதில் ஒரு விஷயமோ?" "அஜித், உளறாதே. என் அப்பாவை நான் ஏன் கொல்ல வேண்டும்? காரணம் வேண்டாமா?" "இன்று நடந்த விவாதம் போதாதா? உன் அப்பா உன் முடிவை ஏற்கவில்லை. நீ அதை ஏற்கவில்லை." "அதற்காக கொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் கொடுமைக்காரன் அல்லவே. ஏன் நீங்களே கொன்று விட்டு, என்னை அடக்க என் மீது கொலைப் பழி சுமத்துவதாகக் கொண்டால்...?" "ஓ நீ சூழ்ச்சியும் கற்றுக் கொண்டாய் அவனிடத்தில்! நாளைக் காலை, புருஷோத்தமன் வந்த பின் வைத்துக் கொள்ளலாம் எல்லா விவாதத்தையும். சென்று உறங்கு. எம்மவர்களின் காவலில்."<br /><br />'இவனிடம் என்ன சொன்னால் கேட்பான்? புருஷோத்தமன், அஜித் அளவிற்கு கூட காது கொடுத்து கேட்க மாட்டான். நான் குற்றமற்றவன் என நிரூபிக்க ஏதேனும் வழி உள்ளதா? இருக்கிறது'. "நான் குற்றமற்றவன் இல்லை என இன்று இரவே நிரூபிக்கிறேன். கொலை நடந்த வேளையில் நான் இங்கு இல்லை என்றால், நான் செய்திருக்க முடியாது அல்லவா?" "ஓ நீ இங்கு இல்லையோ? பிறகு வேறு எங்கு இருந்தாய், மேனகாவின் மடியிலா?" எக்காளமாக சிரித்தான். "மேனகாவை வரச் சொல்லுங்கள். எல்லாம் புரியும்". "உன் காதலி உனக்கெதிராய் சொல்வாளா? இருந்தும் வரச் சொல்கிறேன். அவளிடம் இருந்து எப்படி உண்மையை வாங்குவது என்று எனக்கு தெரியும். வரச் சொல்". புருஷோத்தமனின் வேலையாள் ஒருவன் விரைந்து ஓடினான். <br /><br />நேரங்கள் கரைந்தது. அதோ வந்துவிட்டான், ஆனால் தனியாக! "எதிர் பார்த்தேன். நீ அகப்பட்டுக் கொண்டதும், உனக்கு முன் தப்பித்துச் சென்று விட்டாளா? என்ன காதல்? என்ன காதல்! போய் உறங்கு". அவர்கள் போய் விட்டார்கள்.<br /><br />அம்பி குழம்பி விட்டான்.'மேனகா எங்கே சென்றாள்? அவளையும் அஜித் பிடித்துக் கொண்டு பொய் சொல்கிறானோ? அப்படித்தான் இருக்கும். திட்டம் பலமாகத் தீட்டி இருக்கிறான். இன்று இரவே தப்பித்து அவனுடன் சேர்ந்து விடுவது தான் உசிதம்.' இவ்வாறு எண்ணிக் கொண்டே அம்பி படுத்திருந்தான். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. வாசலில் யாரோ அழைத்தார்கள். அம்பியின் ஆட்களாய்தானிருக்கும். அவன் திரும்பவில்லை. உருவம் நெருங்கி வந்தது. <br /><br />விஷ்ணுகுப்தர்!<br /><br />"அம்பி! நீ மிகப் பெரிய சதியில் மாட்டி இருக்கிறாய். உன் அப்பாவைக் கொன்றது போல் உன்னையும் கொன்று விடுவார்கள். எனக்கு நன்மை செய்தவர் குடும்பம் காணாமல் போவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ம்ம். சீக்கிரம் கிளம்பு. நான் உன்னை பிறகு சந்திக்கிறேன்." என்று தப்பிச் செல்வதற்கான எல்லா வழியையும் சொல்லிச் சென்று விட்டார்.<br /><br />அம்பி தப்பித்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு செய்தி சொல்வதற்காக ஏதாவது/ யாராவது தென்படுகிறார்களா? என்று பார்த்தான். செய்தி என்றதும், நேற்று இரவு செய்தி சொன்ன கல் ஞாபகம் வந்தது கூடவே அது இருந்த இடமும். "ஆம். துணை வேந்தர் அறையில் அந்தக் கற்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். இதே போன்ற கற்கள் மேனகாவின் வீட்டிலும், கிரேக்கத்தில் இருந்து வந்ததாய்ச் சொல்லி வைத்திருந்தார்கள். புரிந்து விட்டது. நேற்று வந்த செய்தி எனக்கல்ல. இந்த சதியில் அனைவரும் இருக்கிறார்கள். யார் எந்த விகிதத்தில் என்பது தான் தெரியவில்லை. அவனுக்கு செய்தி அனுப்பத் தான் வேண்டுமா? அனுப்பினால் தானே தெரியும்.. யார் யார் பக்கம் என்று" தெளிவான மனதுடன் அவனுக்குச் செய்தி அனுப்பினான் "உடனே கிளம்பி வரவும்"<br /><br />(முற்றும்)<br /><br />கதைமாந்தர்கள்:<br />உருவங்கள்:<br />அம்பி : தக்ஷசீலத்தை தலைநகராய்க் கொண்ட காந்தார நாட்டு இளவரசன், கிரேக்க மொழியில் 'Omphis'<br />விஷ்ணுகுப்தர்: தக்ஷசீல பல்கலைக்கழக துணை வேந்தர். வரலாற்று மொழியில் 'சாணக்யர்'<br />மேனகா: கணிகை. கற்பனைக் கதாப்பாத்திரம்.<br />அஜித் சந்திரன்: கைகேய படைத் தளபதி. கற்பனைக் கதாப்பாத்திரம்.<br /><br />அருவங்கள்:<br />அவன்: மாசிடோனிய மாவீரன் அலக்சாண்டர்.<br />புருஷோத்தமன்: கைகேயத்தின் அரசன், பௌரவ வம்சத்தவன், கிரேக்க மொழியில் 'Porus'<br />மற்றும் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில்.<br /><br />காலம்: கிமு நான்காம் நூற்றாண்டின் கடைசியில்.Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-42194317315067735992011-10-19T22:19:00.000+05:302011-10-19T22:23:52.721+05:30உடனே கிளம்பி வரவும் - 2புருஷோத்தமனின் ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதை வாசலிலேயே தெரிந்து கொண்டான். சமீப காலங்களில் அவர்களின் வரவு அதிகமாகி இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அம்பியின் மீது புதிது புதிதாய் குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி வருகிறார்கள். அவர்கள் பேசும் விதத்தில் அம்பியின் அப்பாவும், அவர்கள் சொல்வதே சரி என்றும் நம்பி விடுகிறார். இவ்வாறு சிந்தித்துக் கொண்டே உள்ளே நுழைந்த போது, புருஷோத்தமனின் ஆட்களுடன், விஷ்ணுகுப்தரும் வந்திருப்பது கண்டு அம்பி வியப்படைந்தான். புருஷோத்தமனின் சார்பில் வழக்கம் போல், அஜித் சந்திரனே வந்திருந்தான். அப்பாவே ஆரம்பித்தார்.<br /><br />"வகுப்புகளுக்கு சில வாரங்களாகவே செல்வதில்லையாமே?".<br />"விஷ்ணுகுப்தர் சொன்னாரா?"<br />"இல்லை. அஜித் சந்திரன் கூறிக் கேட்டது. விஷ்ணுகுப்தர் இந்த விவரத்தை சரிபார்க்க மட்டுமே வரவழைக்கப் பட்டார்."<br />'ஒரு மாணவனின் வருகை குறித்த தகவல் அளிக்க துணை வேந்தரே வருவதாவது? அந்த அளவுக்கு வளைந்து கொடுப்பவரா இந்த விஷ்ணுகுப்தர்? வேறு எதோ வில்லங்கம் இருக்கிறது '. "நான் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்வதில்லை, என்ற தகவலைக் கொடுக்கத்தான் அஜித் வந்தாரா?" என்று விஷ்ணுகுப்தரில் இருந்து பார்வையை விலக்கி அஜித் மேல் பதித்தான்.<br /><br />"இல்லை. நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல், வேறு எங்கு செல்கிறீர்கள் என்ற தகவலைத் தருவதற்கு வந்தேன்". மிகப் பெரிய இரகசியத்தை தான் அறிந்து கொண்ட பெருமையுடன் கூறினான்.<br />"எங்கு சென்றிருந்தாய்? அஜித் சொல்வது போல் ..."<br />"ஆம். இருந்தும், நான் யாரைச் சந்திக்கிறேன் என்ற செய்தி, புருஷோத்தமர்க்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன. இதனால் அவருக்கு என்ன நட்டம்?"<br />"நம் அனைவரின் நன்மைக்கக்காகவும் .." என்று அஜித் ஆரம்பித்தான். இந்த வாக்கு வாதம் மேலும் சில மணி நேரங்களுக்குத் தொடர்ந்தது.<br /><br />மாலையில், மேனகாவுடன் இருக்கும் போது, மேனகாவே ஆரம்பித்தாள்."முற்பகலில் அஜித் சந்திரன் வந்தது போல் இருந்ததே. மறுபடியும் புருஷோத்தமனுடன் ஏதேனும் தகறாரா?". "ஆம். இந்த புருஷோத்தமனுக்கு என்னை ஏனோ பிடிக்கவில்லை. சென்ற முறை மாடுகளை கவர்ந்து வந்து விட்டேன் என்றார். மாடுகளை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? நான் ஏன் திருட வேண்டும்?". "பின்பு, அவைகளாகவா நடந்து வந்தன?" "மேனகா, அன்றே சந்தேகித்தேன். புருஷோத்தமன் வேண்டும் என்றே என்மேல் பழி போடுகிறான். இதனால் அவனுக்கு கிடைப்பது என்ன என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை அவனே கூட மாடுகளை இங்கே வந்து கட்டி இருக்கலாம்". "ஏன் வேறு யாரவது கூட உங்களுக்கு இடையில் பகையைக் கிளப்ப செய்யலாம் இல்லையா? நீங்கள் இன்னும் விழிப்போடு இருப்பது நல்லது." "சரி இன்று நடந்தது என்ன? சொல்லுங்கள்" என்றாள்.<br /><br />அவளுடைய உடலைத் தழுவிக்கொண்டே முழுக் கதையையும் சொல்லி முடித்தான். "விஷ்ணுகுப்தரும் வந்திருந்தாரா?" "ஆம்". "கடைசி வரை எதுவும் பேசவில்லையா!" "ம். உன் ஆச்சர்யம் எனக்கு புரிகிறது. கடைசி வரை தம் கருத்தைக் கூறவும் இல்லை. விவாதத்தைக் கவனிக்கவும் தவற வில்லை. இந்த காரியத்தில் அவருக்கு உள்ள அக்கறை என்னைக் குழப்புகிறது." "நீங்கள் யோசிப்பது போல், எதுவும் இருக்காது. அவர் ஒரு உத்தமர். இந்த வகை சூழ்ச்சிகளில் ஈடுபட மாட்டார். அவருடைய கருத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. மேலும் நீங்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது. ஜாக்கிரதை"<br /><br />பேசிக் கொண்டு இருக்கும் போதே, ஒரு கல் உள்ளே வந்து விழுந்தது. இல்லை எறியப்பட்டது. இந்த உருவத்தில் உள்ள கற்களை அம்பி இதற்கு முன் பார்த்திருக்கிறான். எங்கே என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, மேனகா அவசரமாக பிடுங்கி வாசித்தாள். அதில் கண்டிருந்ததாவது "உடனே கிளம்பி வரவும்".Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-16044575323836602042011-10-18T22:55:00.000+05:302011-10-20T11:12:46.650+05:30உடனே கிளம்பி வரவும் - 1(சற்றே பெரிய சிறுகதை. உரையாடல்களில் வரும் பிற மொழிச் சொற்கள் வலிந்து தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளன)<br /><br />"வந்தவர்களை வாழ வைக்க வேண்டாம். நட்புணர்வுடன் வருபவர்களை வாயில் வந்து வரவேற்கும் நல்லுணர்வையுமா இழந்து விட்டோம்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இனம், மொழி என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழப் போகிறோம். பரந்த மனதுடன் பாரபட்சமின்றி அனைவரையும் சரிசமமாக நடத்தும் போக்கு உலகம் எங்கும் வந்து விட்டப் பின்னும், நாம் மட்டும் இன்னும் ஏன் இந்த குட்டையில் உழன்று கொண்டிருக்கிறோம்? நம் எண்ணங்கள் ஏன் இன்னும் விசாலமாகவில்லை? கடவுளர்கள் கூட, நம்மவர்கள், அந்நியர்கள் என்ற பிளவு பார்ப்பதில்லையே? அற்ப மனிதர்கள் மட்டும் ஏன் இந்த பிரிவினை உணர்வுடன் கட்டுண்டு கிடக்கின்றோம்?"<br /><br />"நீங்கள் நினைப்பதில் தவறென்று ஏதுமில்லை. உங்களைப் போன்று உயரிய கல்வி இங்கு யார்க்கும் வாய்க்கவில்லை. இது போன்ற நற்சிந்தனைகள், உங்கள் கல்வியினால் வாய்க்கப் பெற்றது. எனினும், திடீரென்று, உங்களுக்கு இந்த சிந்தனைகள் வரக் காரணமென்ன?". மேனகாவின் விழி கேட்கும் கேள்விக்கு, புருவங்கள் கேள்விக் குறியாகி நிற்பதை அம்பி பார்த்திருக்கிறான். அவள் மொழி கேட்கும் கேள்விக்கு, குறி எங்கு நிற்கும் எனத் துழாவினான். கேள்விக்குறி தொக்கி நின்றது. விடை திக்கி நின்றது.<br /><br />நிச்சயம் இவை உயரிய சிந்தனைகள் தாம். ஆனால் உதித்தது, தன்னுள் அல்ல என்று அம்பி அறிந்திருந்தான் . மேனகாவின் விழிகளில் சந்தேக சாயல் படர்வதைக் கண்டதும், பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டு அவளிடம் இருந்து விடை பெற்றான். 'எந்த ஒரு புரட்சிகரமான செயலுக்கும், நிச்சயம் தடைகள் வரத்தான் செய்யும். வெற்றி பெற்றதன் பின், எஞ்சுவது புகழ் மட்டுமே. 'கூட்டுணர்வு ஒப்பந்தங்கள் நன்மை செய்வதற்காக மட்டுமே, சேர்ந்து வாழ அல்ல. உன் நலனை விட உன் குடும்ப நலனும், குடும்ப நலனை விட நாட்டு நலனும் முக்கியத்துவம் வாய்ந்தவை', இது இந்த நாடு இதுவரை கேட்டு அறியாத தத்துவங்கள் தாம். இத்தகு உயரிய எண்ணங்கள் கொண்டவன், நல்லவனாகத் தான் இருக்க வேண்டும். புருஷோத்தமன் போன்றவர்களுடன் கூடுவதைக் காட்டிலும், இவனுடன் நட்பாய் இருப்பது உயர்ந்தது' என்ற முடிவுக்கு வந்திருந்தான்.<br /><br />நகரத்தின் மறு பகுதியில் இருந்த இந்த பரந்த பழமையான பல்கலைக்கழகத்தில் தான் அம்பி படித்து வருகிறான். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஷ்ணுகுப்தர் அப்பாவுக்கு நெருங்கியவர். கறுத்த தமிழ் பிராமணர். அம்பியின் அப்பா, பல்கலைக்கழகத்திற்கு நிறைய நன்கொடைகள் வழங்கியவர் என்ற பெயரில் இருவரும் பரஸ்பரம் நெருங்கியவர்கள் ஆயினர். பெரிய மனிதர்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதில், பல்கலைக்கு நிறைந்த வருமானம் அல்லது அரசாங்க மானியங்கள் வருவதால், கணிசமான இடங்கள் அவர்களுக்கு வழங்கி, தேர்ந்ததோர் அரசியல்வாதியாகவும் ஆகியிருந்தார் விஷ்ணுகுப்தர்.<br /><br />பல்கலைக்கழகத்தை வந்தடைந்த போது ஒரு செய்தி காத்துக்கொண்டிருந்தது. அப்பாவிடமிருந்து "உடனே கிளம்பி வரவும்".Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-20148873791106177762010-10-19T19:36:00.000+05:302010-10-19T21:05:42.567+05:30பெயர் விகடன்சங்கரன். என் அருமைத் தம்பி. காலையில் இருந்தே ஒரே கவனமாய் அவன் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். வழக்கம் போலத்தான் என் உதாசீனம் செய்து விட முடியாதபடி இன்று அவன் வேலையில் விறுவிறுப்பு அதிகமாய் இருந்தது. காரணம் இது தான். இன்று என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். முன்பே எல்லாம் பேசி முடித்தாகி விட்டது. இன்று சும்மா சம்ப்ரதாயமாகத்தான் வருகிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் நல்ல குடும்பம். மாப்பிள்ளையும் சங்கரனைப் போலவே சமையல் காண்டிராக்டர் தான். காப்பிடிக்கி மான்பிடி சன்ச்க்ருதம் கலந்து பேசும் பாலக்காட்டுத் தமிழ் குடும்பம். மாப்பிள்ளை பேரு? கேட்கலையே. பெயருன்னதும் ஞாபகம் வருது. என் பேர சொல்ல மறந்துட்டேனே.<br /><br />பிறக்கும் போதும் ஏதும் இல்லாம பிறந்து, அப்புறம் கொஞ்ச நாள் சுசீக்குட்டி, கொஞ்ச வருஷம் கழிச்சு சுக்கா, இப்போ சில வருஷமா சுசீன்னு அழைக்கப் படுற சுசித்ரா. சுசீ, சுசீக்குட்டி எல்லாம் சரி, இது என்ன சுக்கா? அங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி. அட.. சட்டுன்னு என்னை சந்தேகப் படாதீங்க. இது முழுக்க முழுக்க குடும்பக் கதைங்கரதால அந்த ஹீரோ சாட்சாத் என் தம்பி சங்கரனே தான். இதோ சிரிப்புன்னா என்னன்னே தெரியாம நிக்கிற இந்த சங்கரன் தான் ஹீரோவான்னு வேற ப்ளோக்குக்கு போயிடாதீங்க. நான் சொல்ற சங்கரனுக்கு வயசு நாலு தான். எப்பவும் சிரிப்பு. அப்போ அவன் எனக்கு வச்ச பேரு தான் சுக்கா. சுசித்ரா வாயில நுழையலேன்னு அவனா எனக்கு வச்ச பேரு. சரி பெரியவனானதும் மாத்திடுவான்னு நினைச்சா.. ம்ஹூம்.. அந்த பெயர் ஊர் முழுக்க பரவுனது தான் மிச்சம். ஒரே ஸ்கூல் வேறயா, என் பேரு சுக்கான்னே ஆயிடுச்சு.<br /><br />"டேய். சுசித்ரா எப்படிடா சுக்காவாச்சு நோக்கு மாத்திரம்?" என்றேன் கோபமாக. "சுசீ+அக்கா= சுக்கா. இது கூட தெரியாதா? ." இந்தக் கேள்வி கேட்டப்போ அவனுக்கு எட்டு வயசு. இந்தப் பெயரைக் கேட்டப்பல்லாம் மாப்பிள்ளைமார் கடை வீச்சம் நாசி தொட்டு குமட்டும். குமட்டுவதுக்கு இது மட்டும் காரணம் இல்லை. இந்த பேரு குமற்ற மாதிரி இன்னொரு காரியமும் செஞ்சிருந்தான் இந்த வாலு. அது என்னனா..<br /><br />"சுசீ.. தயாராயிட்டியோ? அவாளாம் வந்துட்டா". சில நிமிட பரபரப்புக்குப் பின், "புடிச்சுருக்கா?" அம்மா கேட்டாள். போட்டோ பார்த்தே சரி சொன்ன பின் தானே வந்தார்கள். பின் எப்படி பிடிக்காமல் போகும். ஏதோ சம்ப்ரதயமாக் கேள்வி. சம்ப்ரதாயமா தலையசைப்பு. அவ்வளவு தான். அவர்கள் பாட்டுக்கு எதோ பேசிக் கொண்டார்கள். அடுப்பங்கரையில் இருக்கும் அம்மாவுக்கும் எனக்கும் எதுவும் சரியாக் கேட்கவில்லை. அவர் பெயர் என்னவா இருக்கும்.<br /><br />எல்லாப் பேருக்குள்ளேயும் விகடமா இன்னொரு பேரு தொக்கி நிக்கும்ங்கறது, சங்கரன் லாஜிக். சுக்கா மட்டும் இல்லை, இன்னும் பலவும் உண்டு. ரப்பர், உறுமி, ரசம் இப்படி. அவனுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது, இலஞ்சில ஒரு சத்திரத்தில நாங்க எல்லாரும் தங்கி இருந்தோம். அன்னைக்கு காலங்காத்தால ஒரு சுக்கு காபிக்காரன் வந்தான். "சுக்காபீஇ..." ன்னு வழக்கம் போல அளபெடுத்தான். இந்த வாலு இத பிடிச்சுன்னுட்டன். "பருப்பா(பெரியப்பா தான்.) சுக்கா பீ வேணுமா.. சூடா இருக்கு" . எல்லாருக்கும் சிரிச்சி சிரிச்சு வயிறு வலிச்சிருக்கணும். ஆனாலும் சுக்காபீய வயித்துல நிறைச்சுண்டு தான் கிளம்பினா. எல்லாருக்கும் இது மறந்துருக்கும் எனக்கு எப்படி மறக்கும். அஞ்சு வயசு குழந்தையா அவன் சிரிச்சது இன்னும் நினைப்பில இருக்கு.<br /><br />அப்படி சிரிச்சவனா இப்படி. நல்லா தான் இருந்தோம். ஒரு நாள் திடீர்னு அப்பா சாகிற வரை. அன்னைக்குத் தான் அவன் சிரிப்பைத் தொலைச்சான். நாங்க படிப்பைத் தொலைச்சோம். நான் சுக்காவைத் தொலைச்சேன். கொள்ளி வச்ச கையோட கரண்டி எடுத்துட்டு சாசனம் மாமாவோட (சகஸ்ரநாமம் மாமா) கிளம்பிட்டான். அன்னையிலிருந்து இது வரை யாரும் சுக்கானு கூப்டல. இப்போ யாரவது கூப்பிடனும்னு தோன்றது. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம், அப்புறம் பாலக்கட்டுக்கே போயிடுவேன். கல்யாணத்துக்கு அப்புறம் உள்ள பேரே போயிடும், இந்த பேரா நிக்கும்? நான் கேட்டு கூப்பிட்டதா இருக்கக் கூடாது. அவனா கூப்பிடணும். கூப்டுவானா?<br /><br />அவங்க கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாம் சுபம். எனக்கு என்னவோ சங்கரன் சிரிக்றதா தெரிஞ்சுது. அப்பா.. சங்கரன் சிரிக்கிறான். ஆனா முழுசா இல்ல. எனக்கு என்னவோ இன்னிக்கு அவன் இருக்கிற சந்தோசத்தப் பார்த்தா கொஞ்சம் முயற்சி பண்ணினாலே எல்லாம் கை கூடும்னு தோன்றது. சங்கரா.. சிரி.. சங்கரன் எல்லாம் பரிமாறினானே தவிர எதுவும் சாப்பிடவில்லை. இந்தக் காபியைக் கொண்டு போற சாக்கில் அவன் சிரிப்பதை கிட்ட இருந்து பார்த்து விடணும். கார் கிளம்பி விட்டது. என்னைப் பார்த்தான். சிரித்தான். சங்கரன் தானா? அந்த அரை குறை சிரிப்பல்ல இது. ஆத்மார்த்தமான சிரிப்பு. அவன் இழந்த சிரிப்பு அவனுக்கு திரும்ப கிடைத்து விட்டது. இழந்த படிப்பு கிடைக்கப் போவதில்லை. நான் இழந்தப் பெயர்?<br /><br />"சுக்கா.. மாப்பிள்ளை பேர கேட்டியோ? கறிக்காரனாம்"Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-62016676544492613192010-02-17T22:39:00.000+05:302010-02-18T01:23:34.179+05:30யாருக்கு உங்கள் வாக்கு?1969 ஆம் வருடம். நவீன அரசியல் 'தந்திரங்கள்' எதுவும் பெருமளவில் நடைமுறையில் இல்லாத காலம். நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பட்டம் பெற்று உமையாளை மணந்து நான்கு வருடங்கள் ஆகி இருந்தது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தது. எங்கள் வீடு இருக்கும் ஐந்தாம் வார்டுக்கு ஆளுங்கட்சி சார்பில் பெருங்குளத்துக்காரர் கைலாசம் செட்டியாரும், வன்னிக்கோன் மு.மெ. வள்ளியப்பன் செட்டியாரும் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இருவருமே என் அப்பாவுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், என் தந்தையின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள். இருவரும் எங்கள் வீட்டுக்கு வந்து வாக்கு கேட்ட போது என்ன செய்ய என்று நான் கையைப் பிசைந்தவாறு நின்ற போது, அம்மா தான் இருவரிடமும் எங்கள் வாக்கு அவர்களுக்குத்தான் என்று கூறி விட்டார். 'ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு போட்டு விட்டால் ஆச்சு' என்று சுலபமான தீர்வை சொல்லிவிட்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இருவரில் எவர் தகுந்தவர் என்று விசாரித்து அவருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்தேன். விசாரித்ததில் 'இருவருமே தகுதியானவர்' என்று புரிந்தாலும், 'நல்லவர் தாமா?' என்பதில் சிக்கல் எழுந்தது. அந்த சில விஷயங்களைக் கேள்வி பட்டதும் இருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அதற்காக வெற்றி பெரும் வாய்ப்பே இல்லாத ஒருவருக்கு வாக்களித்து வாக்கை வீணாக்கவும் விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று விசாரித்த போது பலரிடம் இருந்தும் பல விதமான யோசனைகள் வந்தது "எல்லாருக்கும் குத்தி விடுங்கள், யாருக்குமே குத்த விருப்பமில்லை என்றால் எதையுமே குத்தாமல் வெறும் சீட்டை மடித்து உள்ளே போட்டு விடுங்கள், அதுவும் இல்லை என்றால் சீட்டை மடித்து சொக்காயில் வைத்துக்கொண்டு எதுவுமே தெரியாதது போல் வந்து விடுங்கள்" இப்படி. 'இந்த முறை வாக்களிக்க விருப்பமில்லை அடுத்த முறை நல்ல வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்களிக்க விருப்பம்' என்று நச்சென்று தேர்தல் ஆணையத்திற்கு உரைக்கும் படி சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். யாரிடமும் இதற்க்கான தீர்வு இல்லை. மேலும் இந்த முடிவு "பிரச்னையை வளர்க்கும், ஏன் யாருக்கும்மில்லாத அக்கறை உனக்கு, சிறு பிள்ளைத்தனம்" எனப் பல வாய்க்கும் அவலாகியது.<br /><br />பல வித கோலாகலங்களுக்கு இடையில் எதிர்பார்த்த வாக்களிக்கும் நாள் வந்தது. இப்பொழுது வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் வந்த பின் தான் 49-0 பற்றி பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் அந்த சட்டம் 1961 ஆம் வருடத்தில் இருந்தே இருந்து வருகிறது, இதைப் பற்றி பள்ளி நண்பன் (அவனும் இதற்கு ஒப்பவில்லை) ஒருவனிடம் இருந்து தெரிந்து கொண்டு பாரத்தையும் வாங்கி நிரப்பிக் கொடுத்துவிட்டேன். அதற்குப் பின் தான் எல்லா சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் அரங்கேறின. வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் கட்சி முகவரின் முறைப்பில் இருந்து, மறு நாள் காலை செய்தித்தாள் முதற்பக்கம் வரை எல்லாமே எனக்கு எதிராகவே இருந்தது. நான் எந்த பாவமும் செய்யவில்லை என்பதை யாரும் புரிந்து கொள்ளத் தயாரில்லை, கைலாசம் செட்டியார் வெற்றி பெற்ற செய்தியை விட நான் வாக்களிக்க மறுத்ததை பெரிய செய்தியாக வெளியிட்டன பத்திரிக்கைகள். என்னைப் பற்றி புறம் பேசுவது அதிகமாகியது, அதிகம் பாதிக்கப் பட்டது உமையாள் தான் ஊர் அவளை "நாபத்தொன்பதாவது ஆச்சி" என்றே அழைக்க ஆரம்பித்து விட்டது. மாவட்டம் முழுவதும் தெரிந்த நபராகி விட்டேன். ஆனால் உண்மையான பிரச்சனை ஆரம்பமானது என்னவோ அடுத்து வந்த சட்ட சபைத் தேர்தலில் தான்.<br /><br />வாக்கைக் காசுக்கு விற்கலாம் என்ற பொது அறிவு மக்களைச் சென்று சேராத காலமாதலால் வெறும் செட்டிநாட்டு பிரியாணிக்கும், சாராயத்திற்கும் விற்றுக்கொண்டு இருந்தனர். இந்த முறை நான் சந்தோசமாகவே இருந்தேன். ஏனெனில் சுதந்திர போராட்ட தியாகி வல்லம் அழகப்பச் செட்டியார், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எந்த ஒரு குற்றமும் இல்லாத உத்தமர் என்று பெயர் எடுத்தவர். அவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஏனெனில் அவரை எதிர்த்து போட்டியிட்டது உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்ற வள்ளியப்பன் தான், உள்ளாட்சி தேர்தலில் தோற்றாலும் தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வேறு எவருக்கும் இல்லாததால் மேலிடம் அவரையே சட்ட சபைக்கு போட்டியிடச் செய்தது. தியாகி போட்டியிடுவதில் என்னைத் தவிர வேறு யாருக்குமே விருப்பம் இல்லை என்று தெரிந்தது. ஏன்? தியாகி நல்லவர் தான் என்றாலும், அவர் ஆட்சிக்கு வந்தால் கட்டுப்பாடு மாவட்டத் தலைவர் கணேசன் கையில் தான் இருக்கும் என்று ஊர் முழுவதும் தெரிந்து வைத்திருந்தது. இந்த தகவல் என்னைக் குழப்பியது. அப்பொழுது தான் வாக்கு சேகரிக்க தியாகி கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு முடிவுக்கு வந்திருந்த நான் "இல்லை சார். தியாகிக்கு வாக்களிக்க விருப்பமில்லை. வள்ளியப்பன் மாமாவுக்கு தான் என் வோட்டு" என்றேன். "ஏன் சார்? ரொம்ப நல்லவர். நாட்டுக்காக குடும்பத்தைத் தொலைத்தவர். நம்ப சாதி வேற. நீங்க ஏன்னு சொல்லியே ஆகணும்" என்றான் கும்பலில் ஒருவன்.பதில் சொல்லாவிட்டால் போகமாட்டோம் என்று அடம்பிடித்தார்கள். நான் சும்மா இருந்திருக்கலாம் "நல்லவனா இருந்த போதுமா? திறமையும் வேணுமில்ல". அவ்வளவு தான். தியாகியைக் கொண்டு வந்து என் முன்னால் நிறுத்தி "இப்போ சொல்லுங்க, இவருக்கு ஏன் வாக்களிக்க விரும்பல?"என அதே கேள்வியைக் கேட்டார்கள். முன் ஒன்று பின் ஒன்று பேச என் மனம் ஒப்பாது அவர் மனம் புண் படும் என்று தெரிந்தும் "திறமை பத்தாது" என்றேன் உறுதியாக. தியாகி நிலை குலைந்து விட்டார்.<br /><br />முன்னை விட இந்த முறை வசமாக மாட்டிக் கொண்டேன். "வாக்களிக்க விருப்பமில்லை" என்றதும் விலகி செல்லாமல் என்னைக் கட்டாயப்படுத்தி அந்த வார்த்தைகளை வரவழைத்தவர்களை யாரும் எதுவும் கேட்கவில்லை. இந்த முறை தேர்தலுக்கு முன்பே என் பெயர் தலைப்புச் செய்திகளில். பெரியவர்களை மதிக்கத் தெரியாதவன் என்று கெட்ட பெயர் ஊர் முழுவதும். இந்த முறை வெளியில் தலை காட்ட முடியவில்லை. நல்லவர்கள் முதல் கெட்டவர்கள் வரை அனைவருக்கும் கெட்டவன் ஆகிவிட்டேன். ஊர் முழுவதும் "மரியாதை தெரியாத மெய்யப்பன் ஒழிக" என்று கோஷங்கள். என்னைப் பழிப்பதற்கென்றே புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டன. நிலைமையின் தீவிரம் உணர்ந்து வாக்களிக்கக் கூட வீட்டில் இருந்து ஒருவரும் வெளியில் செல்லவில்லை. வாக்கு எண்ணும் நாளும் வந்தது. வள்ளியப்பன் தான் வெற்றி பெற்றிருந்தார். ஆனாலும் தியாகியின் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வென்று முதல்வர் பதவியையும் கைப்பற்றி இருந்தது. வெற்றியின் அதிகாரமும், தோல்வியின் குமுறலும் எனக்கு எதிராய் திரும்பி இருந்தது. அவர் தோற்றதற்கு நான் தான் காரணம் என்று பலரும் நம்பவைக்கப் பட்டிருந்தனர்.<br /><br />முதல்வர் பதவி ஏற்ற நாளுக்கு அடுத்த நாள் "மெய்யப்பன் ஒழிக" கோஷம் காதுக்கு வெகு அருகில் கேட்டது. வாசலில் ஒரு பெரும் படை நின்றது. வீட்டுப் பெண்கள் நடுங்க ஆரம்பித்தனர். கதவு தட்டப் பட்டது. இந்தப் பெரும்படைக்கு தேக்கு கதவாய் இருந்தாலும் தாங்காது என்று முடிவு செய்து கதவைத் திறந்தேன். கூட்டத்தை அமைதி காக்கும் படி சைகை செய்து கணேசனும் ஒரு இளைஞனும் உள்ளே நுழைந்தனர். "டேய் நீ என்ன பெரிய கொம்பனா? படிச்சா என்ன வேணா பேசுவியா? உன் தாத்தா வயசு உள்ளவரை மரியாதை இல்லாம பேசுறியா? அவருக்கு திறமை இல்லன்னு சொல்ல நீ யார்ரா? உனக்கு நெறைய தெறம இருக்கா?" கத்திக் கொண்டே இருந்தான் அந்த இளைஞன். நான் வாயடைத்துப் போய் இருந்தேன். பயத்தை விட குற்ற உணர்வு தான் என் வாயை கட்டிப் போட்டிருந்தது. என்ன ஆனாலும் எதுவும் பேசக் கூடாது என்று முடிவுடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். "படிச்சவன். பொறுமையா இருப்பேன்னு தான் உன்னைக் கூட்டியாந்தேன். நீயுமா இப்படி. கொஞ்சம் வெளியே இருப்பா" என்று அவனையும் வெளியே அனுப்பிவிட்டு கணேசன் தொடர்ந்தார்.<br /><br />"பையன் யார்னு தெருதா? ரெண்டு வாரத்துக்கு முன்னாடி IPS பாஸ் பண்ணினான்னு பேப்பர்ல வந்தானே பாலாஜி, நம்ப பய தான். படிச்சவனே இவ்வளவு கோவமா இருக்கும் போது மத்தவுக என்ன நினைப்பாக உங்களைப் பத்தி. அதான் உங்களைப் பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன். முதல்ல என்னை மன்னிச்சிருங்க. குழம்பாதீக. இன்னிக்கு கட்சி தமிழ்நாட்டில நல்ல நிலைல இருந்தாலும் நம்ம தொகுதியில நல்ல ஆளுக அமையல. தியாகியை நிறுத்தினா டெபொசிட் கூட கிடைக்காதுன்னு தெரியும். அதான் அன்னைக்கு நம்ம பயலுங்கள விட்டு வார்த்தையைப் புடுங்க சொன்னேன். நீங்க சொன்னத விளம்பரப் படுத்தி அனுதாப அலைகளைச் சேர்த்ததால தான் டெபொசிட் கிடைச்சது. இந்த டெபோசிட்ட உங்களுக்கே நஷ்ட ஈடா கொடுத்துர்றோம். அதோட இப்போவே எங்களோட வந்து தியாகியைப் பார்த்து ஒரு மாலையைப் போட்டு ஒரு மன்னிப்பு கேட்டுடுங்க. அதை நாளைய பேப்பர்ல போட்டுட்டா உங்க பிரச்சன எல்லாம் ஒழிஞ்சிடும். அப்புறம் பாராளுமன்ற தேர்தல்ல உங்களுக்கு சீட்டு வாங்கித் தர்றது என் பொறுப்பு. என்ன சொல்றீக?" என்று முடித்தார் கணேசன். வாசலில் "மெய்யப்பன் ஒழிக" கோஷம் விண்ணைப் பிளந்தது.Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-62000678156442327272010-01-27T18:15:00.000+05:302010-02-18T01:56:24.004+05:30கழுத்தையும் அறுத்துக் கொண்டாயிற்றுஎன் பெயர் வீரபத்திரன். வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத மிகச் சிறிய தேசமான திறந்த-மண்ணின் மாபெரும் சைனியத்தில் ஒரு சாதாரண படைவீரன். களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப சிறு வயது முதலே சைனியத்தில் சேரவேண்டும் என்ற அவா நிறைவேறியது என்னவோ நான்கு வருடங்களுக்கு முன்பு. மன்னரின் கீழ் பாதுகாப்பு அமைச்சர், அவர் கீழ் படைத் தலைவர்கள், அவர்கள் கீழ் படைவீரர்கள் என்ற எளிமையான கட்டமைப்பு கொண்டது சைனியம். எப்பொழுதும் ஏதாவது போர் என்று ஒரு பொழுதும் சைனியம் நிலையாக தலைநகரில் நின்றதில்லை. எப்பொழுதும் போர் என்பதாலோ என்னவோ படை வீரர்கள் களைத்துக் காணப்பட்டார்கள், பெரும்பாலானவர்கள் விழுப்புண்கள் என்று பெருமை கூறிக் கொள்ள முடியாத அளவுக்கு சீழ் கட்டிய புண்களுடன் வாழ்ந்து வந்தார்கள். சைனியத்தில் சேர்ந்த முதல் இரண்டு வருடங்களில் கூதிர் காலத்து மாமழை நிறைய வீரர்களைக் காவு கொண்டது. புண்கள் புரையோடி, சுரம் கண்டு நோய் கொடுமையால் ஏதேதோ பிதற்றிக் கொண்டு தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். நகரெல்லாம் பெருமையாகப் பேசும் சைனியத்தில் வீரர்களின் உயிருக்கு ஒரு மதிப்பில்லையா?<br /><br />இந்த எண்ணம் தோன்றியதும் பாதுகாப்பு அமைச்சர் முன்னால் நின்றேன். "அடியேன் தெண்டம். பயிர் வளம் காண வந்த மழை உயிர் வளம் கவர்தல் என்ன முறையோ? சீழ்ப்பட்ட புண், சுரம் கண்டு வீரர்கள் வீழ்தல் முறையோ? ஓய்வும் மருந்தும் பேருயிர் உய்விக்கும் என அறிந்தார் இலரோ?" எனக் கேட்டேன். "வந்தார் செல்வதும், புதியோர் புகுதலும் உலக நியதி என அறியா சிறு குழந்தாய் கேள். நோய்க்கு வழி மருந்தல்ல காண், உளத்தீரம்" என்றார். இளம் கன்று பயம் அறியாது என்பார்களே, அது உண்மை தான் யாரும் உரைக்கத் தயங்கும் உரை ஒன்று உரைத்தேன். "படை நிலை கண்டு வருந்தா, உடைப் பொருள் ஒன்றே குறியாக் கொண்டது தான் அமைச்சா? வழி நடத்தும் பெரியோர் இன்றி கழி நிலைப் படை வாகை சூடும் வழி எது உரைப்பீர்". "மூடனே! படை நடத்தல் பற்றி பாடம் புகலுவையோ? புண் கொண்டு வாழ்தல் அரிதா? இதோ உன் கை விரல்கள் துண்டித்தேன். வீழ்வையோ வாழ்வையோ யானே கண் கொண்டு காண்கிறேன். போ"<br /><br />என் கை விரல்கள் இரண்டை இழந்த பின், அமைச்சரிடம் பேசும் துணிவை இழந்திருந்தேன். அமைச்சர் தான் இப்படி, ஆனால் மன்னர் மிகவும் நல்லவர். நாடு நகரங்கள் எல்லாம் பஞ்சத்தால் வாடி பெரிய பெரிய நாடுகளில் எல்லாம் மக்கள் மடியும் போது, எம்மன்னர் கஞ்சித் தொட்டி திறந்து பஞ்சம் போக்கினார். அந்த வருடம் எம்மண்ணில் கூதிரும் இல்லை கூற்றுவனும் இல்லை. வட திசைப் போரில் படைத்தலைவர் மாராயர் வழி நடத்த சென்ற ஒரு சிறு சைனியத்தில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்து படை நடத்தினேன். மாரயரின் படையில் இது காறும் மும்முறை இடம் பெற்றுள்ளேன். போர்க்களப் பயிற்சியில் அவரே என் குரு. அந்த வயதிலும் அவர் வாள் வீசும் வேகத்தைக் கண்டால் பேடியும் "வாள் வாள் " என்று கத்துவான். நான் அவர் மீது கொண்டது பக்தி என்றால் அவர் என் மீது கொண்டது நம்பிக்கை. எனக்கும் அமைச்சருக்கும் இடையே இருந்த பிரச்சினை குறித்து தோராயமாக அறிந்து வைத்திருந்த அவர் ஓரளவு சமரச முயற்சியிலும் ஈடுபட்டிருப்பார் என நினைக்கிறேன். வடதிசை நாட்டின் படைபலம் பற்றி அறிய வேவு பார்க்க சென்ற போது என்னையும் உடன் அழைத்துச் சென்றவர் என்ன காரணத்தாலோ ஐந்தே நாட்களில் திரும்பி விட்டார். நான் தனியனாக ஒரு திங்கள் ஒற்றனாகப் பணி முடிந்து திரும்பிய நேரம் அனைத்தும் மாறி இருந்தது.<br /><br />பாதுகாப்பு அமைச்சர் கொலை செய்யப்பட்டு இருந்தார். யார் காரணம் எனத் தெரியவில்லை. குழப்பங்கள் நிறைந்த இந்த தருணத்தில் தான் பலரும் நகர் நோக்கி படை கொண்டு வந்தனர். அவசர நிலையில் மன்னர் நகரமாதண்ட நாயகரை பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்தார். இந்த முடிவில் படைத்தலைவர்களுக்கு குறிப்பாக மாராயருக்கு ஏனோ உடன்பாடு இல்லை. ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதாக எண்ணினார். எனக்கு பாதுகாப்பு அமைச்சரைப் பிடிக்காது என்றாலும் அவர் சாக வேண்டும் என எண்ணியதில்லை. ஏனெனில் அவர் படை நடத்தும் திறம் எவருக்கும் வராது. ஆனால் புதியவர் அவரினும் வல்லவராகவும் நல்லவராகவும் இருந்தால் என்ற எண்ணம் நம்பிக்கை அளித்தது. வடதிசைப் போர் வலுவாக இருந்ததால் மாரயரும் நானும் போர்க்களத்தில் மட்டுமே சிந்தை கொண்டோம்.<br /><br />இந்த நேரத்தில் தான் என் தாயின் உடல் நிலை சரி இல்லை என்ற செய்து வந்தது. ஊருக்கு செல்ல வேண்டும் என்று மாராயரிடம் விடுப்பு கேட்ட போது, போரைச் சீக்கிரம் முடித்து விடுவோம், சற்று பொறுத்துக்கொள். அதன் பின் எவ்வளவு நாள் வேண்டுமோ எடுத்துக்கொள். நீ இல்லாமல் படை நடத்துவது கடினம் என்று சமாதானம் கூறினார். ஐந்து மாதங்களுக்குப் பின் போர் இன்னும் ஐந்து நாட்களில் முடியும் என்று தோன்றியது. இந்த சமயத்தில் தான் என் தாயின் உடல் நிலை இன்னும் மோசமாகி விட்டது என்ற செய்தி வந்தது. போர் முடிந்து விடும் என்று நிச்சயம் ஏற்பட்டதால் மாராயரிடம் சென்று அன்றிரவே ஊருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தேன். அப்பொழுது வந்த வீரன் ஒருவன் மாராயர் அழைக்கின்றார் என்றான். நான் அவர் கூடாரத்திற்குள் சென்ற போது மாராயர் என்னையே வெறித்து நோக்கிக் கொண்டு இருந்தார். என்னை வீரர்கள் சூழ்ந்து கொண்டனர், என் உடலில் பல்வேறு பகுதிகளில் கத்தி இறங்கியது. நான் மூர்ச்சையுற்றேன்.<br /><br />நான் விடுமுறையில் வந்து ஒரு மாத காலம் ஆகி இருந்தது. நான் வந்த சில நாட்களில் என்னைக் கண்ட சந்தோசத்திலேயே என் தாய் உடல் நலம் தேறியிருந்தாள். ஆனால் என் உடலில் விழுந்த கத்திக் குத்துக் காயங்கள் எதுவும் ஆறவில்லை. மருந்தே நுழையாத தேசம் ஆயிற்றே திறந்த-மண். அந்த சமயத்தில் தான் குணதிசையில் படை நடத்திச் செல்ல தகுந்த வீரன் வேண்டும் என என்னை அழைத்தனர். இம்முறை படைத் தலைவர் வல்லவரையர். வடதிசைப் போர் வெற்றிக்குப் பின் மாராயர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரை சந்திக்கச் சென்ற போது அவர் ஓய்வில் இருப்பதாகக் கூறி என்னை சந்திக்க அனுமதிக்க வில்லை. வட திசைப் போரில் என் சாகசங்களைக் கேள்வியுற்ற வல்லவரையர் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டு இருந்தார். பட்ட காயங்கள் அவ்வப்பொழுது உறுத்திக் கொண்டு இருந்தாலும் குனதிசைப் போரில் என் பங்கு திருப்தி கரமாகவே இருந்தது. அனுபவமிக்க படை வீரன் என்பதால் வீரர்களும் என் கட்டளைக்கு அடி பணிந்து மேலும் மேலும் வெற்றியைச் சேர்த்தனர். இந்த சமயத்தில் தான் மாராயரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் செண்ட போழ்து அவர் தன இறுதி மூச்சை இழுத்துக் கொண்டுஇருந்தார். அவர் உடல் எங்கும் காயங்கள் புரையோடி இருந்தன. என்னை அருகே அழைத்து என் காதில் "நீ மடிந்தனை என கருதுற்றேன். இம்மண் உன் வல்லன்மைக்கு ஒப்பது அன்று " என்றார். நானோ "சீரிய தொண்டிற்கு சீரும் சிறப்பும் பலன்களாம்" என்றேன். என்னைப் பார்த்து புண் முறுவல் செய்தார். மறு கணம் அவர் உயிர் பிரிந்தது.<br /><br />அவருக்கு என்ன நேர்ந்தது என்று வல்லவரயரிடம் வினவிய போது அவர் சாவிற்கு அவரே காரணம். மேல் திசைப் போரில் அவரின் செயல் பாடுகள் குறித்து மாதண்ட நாயகம் மன்னரிடம் அத்ருப்தி தெரிவித்து இருக்கிறார். மாரயரின் திறன் அறிந்த பாதுகாப்பு அமைச்சரோ, மாராயருக்கு ஆதரவாக பேசியதோடு அல்லாமல் தண்ட நாயகரைப் பழித்தும் பேசிவிட்டார். மன்னரிடம் அதிக செல்வாக்கு கொண்ட தண்ட நாயகரைப் பழித்ததே இவ்விருவரின் அழிவுக்குக் காரணம். "அப்படி என்றால் இவ்விருவரின் மரணத்திற்கும் தண்டநாயகர் தான் காரணமா?". "தெரியவில்லை. எதற்கும் ருசு வேண்டும் அல்லவா?". அந்த வருடத்திய கூதிர் வந்தது. என் உடல் நிலை மோசமாகியது. காயங்கள் சீழ் கோர்த்தன. வலியில் ஏதேதோ உளறினேன். நோய்வாய்ப்பட்ட முதியவர்களின் நிலைக்கு ஆளானேன். என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன், அதட்டினேன். வல்லவரயரையும் விட்டு வைக்க வில்லை. அவர் எனக்கு புத்தி பேதலித்து விட்டது என்றார். நான் செத்தாலாவது எனக்கு பதில் ஒரு படை வீரனை பெற்றுக்கொள்ளலாம் என என் காது படவே பேசினார். நானும் என்னைக் கருணைக் கொலை செய்து விடும்படி கெஞ்சினேன். ஜீவகாருண்யம் பேசி மறுத்து விட்டார். எங்கு சென்றாலும் என்னை வீரர்கள் தூக்கிச் செல்வது என்ற நிலைக்கு என் நிலை மோசமாகியது. ஆயினும் என் வீரர்கள் என் உத்தரவைக் கேட்டு அதன்படி நடந்து வெற்றியைச் சேர்த்துக்கொண்டே இருந்தனர். இதுவும் வல்லவரையர் என்னைக் கொல்லாததற்குக் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் சமீப காலமாக என் நினைவு தப்பி விடுகிறது. அந்நேரம் சரியான வழிநடத்தல் இன்றி படை சேதமுறுகிறது. அவர்களின் சேதத்திற்கு நானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு உறுத்துகிறது. எனக்கு உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை அற்று விட்டது. இந்தப் போரை முடித்து உயிரை மாய்க்கலாம் அல்லது ஒய்வு எடுக்கலாம் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வப்பொழுது தப்பும் நினைவு நான் போர் முடியும் வரை தாங்க மாட்டேன் என்று என்ன வைத்து விட்டது. இறந்து போன மாராயர் வேறு அவ்வபொழுது வந்து, 'வந்து விடு வந்து விடு' என்று அழைக்கிறார். அதான் இந்த முடிவு. என் உயிரை மாய்க்கப் போகிறேன். எனக்குப் பதில் வல்லவரையர் ஒரு தகுதிவாய்ந்த வீரனைத் தருவித்துக்கொள்வார். "இதோ வந்து விடுகிறேன் மாராயரே." கூர்வாள் கொண்டு என் கழுத்தை அறுத்துக் கொள்கிறேன்.<br /><br /><span style="color: rgb(102, 51, 255);">கதையைப் படித்து முடித்தப் பின் "என்ன இது? எதற்கு இந்த கதை?"என்றார் மானேஜர். "இதோ இந்த கடிதத்தையும் <span style="color: rgb(102, 51, 255);">படித்து விடுங்கள். என் ராஜினாமா கடிதம்". "ஏன்?". "இந்தக் கதையில் வரும் வீரபத்திரன் நான் தான். அந்தக் கூர்வாள் உங்கள் கையில் உள்ள கடிதம்". மறுபடியும் இந்தக் கதையைப் படித்தார். படித்து விட்டு "மன்னரிடம் பேசவா?"<br /><br />"<span style="font-weight: bold;">வேண்டாம். தேவைப் படாது. கழுத்தையும் அறுத்துக் கொண்டாயிற்று".</span><br /></span></span><strong></strong>Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-32456449896098923632010-01-10T01:18:00.000+05:302010-01-10T02:55:01.215+05:30எப்படி மறந்தாய்?எப்படி மறந்தாய்? வசந்தி.. பத்தாம் வகுப்பு முடிய ஒன்றாக படித்தவள். நான் பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றதும் சித்திக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. வந்ததில் இருந்து விடுதி வாசம் தான். இரவு வேலை. காலை முழுவதும் உறங்கி விட்டு மதிய உணவுக்குப் பின் எங்காவது ஊர் சுற்ற செல்வது வழக்கம். மாலை விடுதி வந்ததும் வேலைக்குத் தயாராவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். இப்படி தான் ஐந்து வருடங்களுக்கு முன் மதிய உணவுக்குப் பின் நகர் வலம் சென்ற போது வசந்தியை மறுபடியும் சந்தித்தேன். எப்படி அவளிடம் பேசுவது? என்ன செய்கிறாய் என்று கேட்பாளே? தயங்கி நின்றேன். ஆனால் அவளே வந்து அறிமுகம் செய்து கொண்டு பேசினாள். அன்று முதல் அவளோடு மட்டுமே தனியே ஊர் சுற்றுவது என்று ஆகி விட்டது. முதலில் கடைத்தெரு, கோயில் என்று இருந்தது பின்னர் கடற்கரை, தியேட்டர் என்று மாறியது. இப்படி செல்லும் போது தெரிந்தவர்கள் யாரவது அவளோடு பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று பயம் இருந்தது. எனக்குத் தேறுதல் சொல்லி ஆற்றுப் படுத்தியதே அவள்தான். அவளா.. வேறு ஒருவனுடன் ஓடி விட்டாள்?<br /><br />எப்படி மறந்தாய்? வசந்தி.. ஐந்து வருடங்களுக்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு நகரத்தில் உள்ள பிரபலமான் பெண்கள் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்தாள். அதன் பின் கே கே நகர் பஸ் டிப்போவை ஒட்டி செல்லும் சாலையில் பழைய மரப் பொருட்கள் விற்கும் கடைத் தெருவை கடந்து போனால் வரும் ஒரு சிறிய தெருவில் சில பெண்களுடன் தங்கி இருந்தாள். அங்கிருந்து அவள் அலுவலகம் மிக அருகில். நன்றாக சம்பாதித்தாள். என்னை வேலையை விட்டுவிடும் படியும் அவளே என்னைப் பார்த்துக்கொள்வாள் என்றும் கூறினாள். ஒரு பெண்ணை நம்பி செல்வதா? தவிர அவளுடன் வெளியில் செல்லவே யோசிக்கும் நான் அவளுடன் தங்கினால்? அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? சமூகம் என்ன பேசும்? அவள் நேற்றிரவே அவனுடன் ஓடி விட்டாளாம். அவளைப் பெற்றவர்கள் இந்நேரம் அவளைத் தேடிக் கொண்டு இருப்பார்கள். நிச்சயம் என்னைப் பற்றியும் விசாரிப்பார்கள். அவர்கள் கண்ணில் படுவதற்குள் சென்று விட வேண்டியது தான். டிப்போவில் காத்து நிற்காமல் உதயம் தியேட்டர் நிறுத்தத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.<br /><br />எப்படி மறந்தாய்? என்னைக் கை விடமாட்டேன் என்று சொன்ன சொல்லை எப்படி மறந்தாய்? மரீனா செல்லும் ஒரு பேருந்து கூட்டத்துடன் வந்தது. எவனோ ஒருவன் "ஏய் வரியா? என்ன ரேட்டு?" என் பின்னல் நின்ற பெண் கூனிக் குறுகி நின்றாள். இன்று முடியாது .. இதே வேறு ஒரு நாளாக இருந்தால்.. அந்தப் பெண் பேருந்தில் ஏறிக் கொண்டாள், அவளைத் தொடர்ந்து நானும் ஏறிக் கொண்டேன். கூட்டம் அதிகம் தான். இடி மன்னர்கள் குதூகலித்துக் கொண்டு இருந்தார்கள். அந்தப் பெண்ணை இப்பொழுது வேறு ஒருவன் பின்புறம் ஒட்டி நின்று உரசிக் கொண்டு இருந்தான். அவள் மேலும் குறுகினாள். வசந்தியின் ஞாபகம் வந்தது. இப்படி தான் பேருந்தில் செல்லும் போதெல்லாம் கூசிப் போவாள். அந்த நேரத்தில் எல்லாம் அவளை என் அணைப்பில் கொண்டு வந்து.... அவன் எல்லை மீறினான். நான் அந்த பெண்ணின் பின்னால் அவனை தள்ளி விட்டு விட்டு நின்று கொண்டேன். வேண்டுமானால் என்னை உரசிக் கொள்ளட்டும். என்னைப் பார்த்ததும் சிரித்தபடியே ஒன்றுமே தெரியாதவன் போல் விலகிக் கொண்டான்.<br /><br />எப்படி மறந்தாய்? எத்தனை முறை அந்தக் கயவர்களிடம் இருந்து உன்னை அரவணைத்துக் காத்தேன்? என்னை அரவணைக்க மட்டும் எப்படி மறந்தாய்? '.................' ரயில் நிலையத்திற்கு இடது புறம் உள்ள சாலையில் மூன்றாவது சந்து இளைஞர்களிடம் வெகு பிரபலம். நகரத்தின் பெரிய சிவப்பு விளக்கு பகுதிகளில் இதுவும் ஒன்று. கால் போன போக்கில் அனிச்சையாக அந்த சந்தில் நுழைந்த போது மணி ஐந்து. புரோக்கர்கள் அப்பாயின்மென்ட் பிக்ஸ் செய்ய அவசர கதியில் அலைந்து கொண்டு இருந்தார்கள். தெரு முனையில் மாருதிகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டு இருந்தன. ஒரு சிலர் "தொழில்" ஆரம்பிக்கும் முன்னே நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தனர். ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் அலைமோதும். இங்கு தான் கவிதா இருக்கிறாள் . எல்லாம் 'தொழில் முறைப் பழக்கம்' தான். வசந்தி இல்லை என்று ஆனதும் பல நாட்கள் காணமல் இருந்த இவளைத் தேடிக் கால்கள் வந்து விட்டன. பழக்கமான புரோக்கர் ஒருவன் பல்லிளித்தான். "எதாச்சும் வேணும்னா.." என்று இழுத்தான். "இல்ல வேண்டாம்" என்று சொல்லிய படியே அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். பழக்கமான 'ஆள்' என்பதால் யாரும் தடுக்க வில்லை. கவிதா எதிரில் வந்தாள். "வாசு நீயா? நீ வருவேன்னு தெரிஞ்சிருந்தா புரோகிராம கான்சல் பண்ண சொல்லி இருப்பேனே? கை நீட்டி காசு வாங்கியாச்சு.. வெளியே வேன் நிக்குது..இப்போ முடியாது.. உள்ளே அனிதா இருக்கிறா.. அவகிட்ட கேட்குறியா?" .. 'அனிதாவா? அவ எப்போ இங்கே வந்தா?'.. கவிதா போய் இருந்தாள்.<br /><br />எப்படி மறந்தாய்? நீ விட்டு சென்றால் நான் இந்தக் குழியில் தான் விழுந்து கிடப்பேன் என்று தெரிந்தும் ஏன் என்னை விட்டுச் சென்றாய்? அனிதாவும் அவசரம் அவசரமாய் தயார் ஆகிக் கொண்டு இருந்தாள். "வா வாசு.. இன்னிக்கும் வேலைக்கு போகலியா? உன் க்ளோஸ் பிரண்டு ஆனந்து ரெண்டு நாளா என் கூட தான் சுத்திட்டு இருக்கான். அவன் தான் சொன்னான். இன்னிக்கும் அவனோட ப்ரோக்ராம் தான்." ஆனந்துக்கு ஒரு நாள் கூட பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது. "நீ இரேன். நான் ராத்திரிக்குள் வந்துடறேன்." அவள் பறந்து விட்டாள். அறையில் யாரும் இல்லை. வாய் விட்டு அழ வேண்டும் என்று தோன்றியது.. அழுதேன்.."எனக்கு இதில் இருந்து விமோசனமே கிடையாதா? வசந்தி இந்த வேலையை விட்டு உன்னுடனே வந்து வேறு வேலை செய்து பிழைக்கலாம் என்று இருந்தேனே? என்னைப் பற்றி எண்ணாமல்.." செல் அழைத்தது. எடுத்தேன்.. "இன்னியோட மூணு நாள் ஆறது.. நாளைக்கு பார்க்கலாமே.." இந்த மூன்று நாள் மட்டும் தான் விடுதலை. அதுவும் நானாக எடுத்தால் தான் ஆயிற்று.<br /><br />'நான் வாசு என்கின்ற வசுமதி'.Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5603313247704089675.post-38655048274580361152009-11-19T21:51:00.000+05:302009-11-20T00:24:34.217+05:30சடலத்தின் பெற்றோர்விமானம் தரையிறங்கும் போது அதிகாலை நான்கு மணி. விக்னேஷ் விமான நிலையத்திற்கு வந்திருந்தான். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பின் எங்கள் அதகளத்தை ஆரம்பித்தோம். "பார்க்றதுக்கு பளபளன்னு இருந்தாலும் மழைன்னு வந்துட்டா எல்லா ரோடும் பல்லிளிச்சிடுது". "அது எப்படிடா இது ரோடுன்னு கூசாம சொல்றே. உங்கப்பா PWDல வேல பார்க்கிறாருன்னா? சரி அவங்களும் என்னதான் பண்ண முடியும்? அவங்களும் நம்ம மக்கள் மாதிரியே இவங்களாவது ஒழுங்கா பண்ண மாட்டங்களான்னு நம்பி பொறுப்ப ஒப்படைக்கிறாங்க. அரசியல்வாதிங்க ஏமாத்தற மாதிரியே காண்ட்ராக்ட் எடுக்றவனும் எமாத்திர்றானுங்க. அட்லீஸ்ட் முன்னவங்க ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுக்ரானுங்க. இவனுங்க கொடுத்தாலும் உங்கப்பா வாங்கிக்கவும் மாட்டாரு." "போதும்டா நிறுத்து. கால் வருது என்னன்னு பாரு"<br /><br />"சிவா.. பிரயாணமெல்லாம் சௌர்யமா இருந்ததா? பஸ்ல தானே வர்றே. வந்துட்டேன்னு போன் பண்ணா என்னவாம். SMS அனுப்றான்". "இல்லமா. விக்கி கார்ல வர்றேன்". "சரிதான். வர்றதே ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நாலு நாளைக்கு. அதிலும் மூணு நாள் அவன் வீட்ல தான் கிடப்ப. இப்போ போறதே அவன் வீட்டுக்கா? இன்னிக்கு தீவாளி டா". "இல்லம்மா வீட்டுக்குத் தான் வர்றேன். ஆரம்பிச்சுடாதே". "டேய் வச்சிடாதே. போட்டோ பார்த்தியா? சென்னைல தான் வேல பார்க்கிறா. வசந்தி . எனக்கு பிடிச்சிருக்கு. முடிச்சிரலாமா? .." "அப்றமா பேசுவோம்மா" "எப்போ பார்த்தாலும் அப்புறம் அப்புறம். அப்படி என்ன தல போற காரியமோ". ஒரு வழியாக வைத்து விட்டாள். அப்பா என்ன செய்து கொண்டிருப்பார்?<br /><br />"என்னடா தீவாளி எல்லாம் எப்படி போகுது. அடுத்த வருஷம் தல தீபவளிங்க்ரதால சிறப்பா இருக்குமே". "அதுக்கு என்ன அது பாட்டு போகுது". மழை வலுத்தது. "வண்டிய நிறுத்து". சற்று தொலைவில் .. மின் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீப்பொறி அருகில் உள்ள குடிசையில் பற்றியது. என் செல்லில் "மீட்பு பணிகளா? இங்கே காந்திநகர் முருகன் கோயிலுக்கு பக்கத்தில தீ புடிச்சிருக்கு.. சீக்ரம் வரீங்களா?....."<br />-------------------------------------------------------------------------------------------------<br />சரியாக ஒரு மணி நேரம் முடிந்து விட்டிருந்தது. கால் மணி நேரத்திற்கு முன் மீட்பு பணியினர் வந்து சேர்ந்து இருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மேலும் உதவிக்காக அலுவலகத்தில் மன்றாடிக் கொண்டிருந்தனர். நிலைமை மோசமாகத் தான் இருந்தது. அந்த தற்காலிக குடிசையை வெடிகள் வைக்கும் குடோனாக வைத்திருந்திருக்கின்றனர். எரிபொருளின் வினையூக்கதால் எதிர்பார்த்ததை விட அதிகமான இழப்பு ஏற்பட்டு இருந்தது. செய்தி அறிந்து மீடியாவை சேர்ந்த பல நிருபர்களும், புகைப்படக் கலைஞர்களும் குவிந்திருந்தனர்.<br /><br />இது வரை அதிர்ச்சியில் இருந்து மீளாத நாங்கள், தற்போது கொஞ்சம் துணிச்சல் பெற்று சம்பவ இடத்தை பார்வையிடத் தொடங்கினோம். கொஞ்சம் தள்ளி இருந்த வீட்டில் நெருப்பு அணைக்கப் பட்டு மீட்பு பணியினர் உள்ளே நுழைந்து இருந்தனர். வீட்டின் வெளியே முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒருவர் இருந்து அழுது கொண்டு இருந்தார். விசாரித்ததில் அவர் இரு மகன்களும், மனைவியும் உள்ளே மாட்டிக் கொண்டார்கள் என்றும் இவர் எவ்வளவோ முயன்றும் அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றும் அழுதார். சிறிது நேரத்தில் கண்கள் பிதுங்கியபடி, நெருப்பின் சூட்டுக்கு கொஞ்சமும் குறையாத சூடான இளம் இரத்தம் கொப்புளித்தப்படி ஒரு சிறுவனை வெளியே கொண்டு வந்து கொண்டு இருந்தனர். என்னையும் மீறி ஒரு சக்தி என்னை அவனை நோக்கி இழுத்தது. நிலைமையின் தீவிரம் உணர்ந்து அவன் தந்தை என்னை இழுத்துப் பிடித்துக்கொண்டார்.<br /><br />அவனை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, சாஸில் தோய்த்த சிக்கன் போல் பாதி வெந்தும் வேகாததுமாய் இரத்தத்தில் ஊறிய ஒரு பெண்ணை எடுத்து வந்தார்கள். போகும்போது தன் கணவனைக் கண்ட அந்தப் பெண் எதுவுமே நடக்காதது போல் ஓடி வந்து அவர் காலடியில் அமர்ந்து கொண்டாள். "என்னங்க நம்ம பிள்ளைகள பார்த்தீங்களா?". "எல்லாம் கடவுள் பார்த்துப்பார்" என்றபடி அப்பெண்ணை சமாதானம் செய்ய ஆரம்பித்து இருந்தார். அவருக்கு இனி என் சமாதானம் தேவை இல்லை என்பதால் இருவரும் அங்கிருந்து கிளம்பி அடுத்த வீட்டுக்கு சென்றோம்.<br /><br />"இன்று அதிகாலை ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து சாதனா" தொகுப்பாளினி(!?) பொரிந்து முடித்திருந்தாள். புகைப்படக் கலைஞர் பிணங்களின் அழகை படமாக்கிக் கொண்டிருந்தார். விபத்தில் இருந்து தப்பியவர்களின் பேட்டி, விபத்தின் காரணம் என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.<br /><br />அருகே தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்த பெண்மணி "சாவை படம்புடிச்சு பொழப்பு நடத்துறீங்களே துப்பு கெட்ட பயலுவளா" என்று வசைமொழி கூறிக் கொண்டிருந்தாள். அவள் பேச்சை கண்டு கொள்ளாமல் ஒருவன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவள் அருகில் போனோம். "என்னம்மா ஏன் இந்த கோபம்?" என்றேன். "பின்ன என்ன தம்பி. எத்தன உயிரு துடிச்சிட்டு இருக்கு, அதக் காப்பாத்தாம படம் புடிச்சிட்டு?". "இவங்க என்ன பண்ண முடியும் இவங்க என்ன டாக்டரா?". "ஒரே ஒரு ஆம்புலன்சு தான் இருக்கு இவனுங்க வண்டிய கொடுத்தா என்னவாம். இங்க பாரு என்புள்ள துடிச்சிட்டு இருக்கு. அங்க நின்னு பேட்டி கொடுத்துட்டு இருக்கான் என் தம்பி. உறவு எல்லாம் சும்மா தம்பி".<br /><br />"அந்தம்மா சொல்றதெல்லாம் சரிதான். உறவுகள் என்று எதுவுமே இல்ல. இததான் பகவத் கீதையும் சொல்லுது. ஆன்மாவுக்கு என்று உறவுகள் இல்லை".<br />"உறவுகள் இல்லைன்னு சொல்ற அதே அம்மாதான் தன் பிள்ள உயிரை காப்பாற்ற தன்னால முடியாத இந்த நிலையிலும் போராட்றா. இப்போ நீ சொன்ன இந்த வாக்கியத்தை அதோ அங்கே நின்னு அழறாங்களே அவங்கட்ட சொல்லு பாப்போம்". எப்பொழுதும் நான் பேசுவதுக்கு மறு மொழி கூட கூறாத விக்கி இந்த முறை என்னை வென்றிருந்தான்.<br /><br />அவன் காட்டிய திசையில் ஒரு கார் எரிந்து கொண்டு இருந்தது. காரில் இரு பிணங்கள் கருகியபடி இருந்தன. ஒரு பிணம் செல்லில் பேசியபடியே இறந்திருந்தது. அதன் அருகில் என் சடலத்தின் பெற்றோர் நின்று அழுது கொண்டிருந்தனர்.Yamineemhttp://www.blogger.com/profile/09525715277040954128noreply@blogger.com0